பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா சமீபத்தில் கைது செயப்பட்டார். இந்தியா- பாகிஸ்தான் இடையே சமீபத்தில் போர் ஏற்படும் சூழல் உருவானது. இரு நாடுகளும் எல்லைகளில் கடும் தாக்குதல்களை நடத்தியது. மேலும் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். அவரிடம் என்.ஐ.ஏ மற்றும் ஐ.பியினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், அவருக்கு வங்கதேசத்துடன் தொடர்புகள் இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் அவர் மீது சந்தேகம் இன்னும் அதிகமாகி உள்ள நிலையில், குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் மீது எதிரி நாட்டோடு ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐஎஸ்ஐயின் சில செயல்பாட்டாளர்கள் உட்பட பல பாகிஸ்தான் முகவர்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் திணிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக யூடியூபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது குறித்து ஹரியானா காவல்துறை விசாரித்து வருகிறது. மேலும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா விரைவில் வங்கதேசத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் முக்கியமான இராணுவத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பஹல்காம் தாக்குதல்களின் பின்னணியில் பாதுகாப்பு மீறல்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வங்கதேசத்திற்கு அவர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் பாகிஸ்தானிய நபர்களை சந்திக்க திட்டமிட்டாரா அல்லது வங்கதேச அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டிருந்தாரா என்ற கோணத்திலும், என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சீனாவிற்கும் ஜோதி சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி பாகிஸ்தானில் இருந்தபோது அவருக்கு ஏகே 47 துப்பாக்கியுடன் 6 பேர் பாதுகாப்பில் இருந்தனர் என ஸ்காட்லாந்து யூடியூபர் நேரில் பார்த்ததாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த வீடியோ பாகிஸ்தானில் ஜோதிக்கு கிடைத்த சிறப்பு வரவேற்பு குறித்த உண்மையை வெளிப்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. இது பல்வேறு சந்ததேகங்களை கிளப்பியுள்ள நிலையில், பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகளை அவர் சந்தித்ததாகவும், இந்தியாவுக்கு வந்த பிறகும் அவர்களிடம் ஜோதி தொடர்பில் இருந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு சாதாரண இந்திய யூடியுபருக்கு பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்? பாகிஸ்தானுக்கும் ஜோதிக்கும் என்ன தொடர்பு? உண்மையில் ஜோதி இந்தியாவைச் சேர்ந்தவரா அல்லது இந்திய அடையாளத்தை மட்டும் வைத்துள்ளவரா? போன்ற பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜோதிக்கும் கேரள முதலமைச்சரின் மருமகனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதாவது கேரளாவுக்கு ஜோதி சுற்றுலா பயணமாக வந்த போது, அவருக்கு முழுக்க முழுக்க கேரள மாநில சுற்றுலாத் துறை ஸ்பான்சர் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. முக்கியமாக ஜோதியின் கண்ணூர் பயணத்தின் போது, சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ள முதலமைச்சர் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ் தான் அவருக்கு ஸ்பான்சர் செய்ததாகவும், இருவரும் சந்தித்ததாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், அதன் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாகக் குற்றச்சாட்டபட்ட ஜோதிக்கும், கேரள முதலமைச்சரான பினராயி விஜயனின் மருமகனுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்ற பாஜகவின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், அவருக்கு வங்கதேசத்துடன் தொடர்புகள் இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் அவர் மீது சந்தேகம் இன்னும் அதிகமாகி உள்ள நிலையில், குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் மீது எதிரி நாட்டோடு ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐஎஸ்ஐயின் சில செயல்பாட்டாளர்கள் உட்பட பல பாகிஸ்தான் முகவர்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் திணிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக யூடியூபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது குறித்து ஹரியானா காவல்துறை விசாரித்து வருகிறது. மேலும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா விரைவில் வங்கதேசத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் முக்கியமான இராணுவத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பஹல்காம் தாக்குதல்களின் பின்னணியில் பாதுகாப்பு மீறல்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வங்கதேசத்திற்கு அவர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் பாகிஸ்தானிய நபர்களை சந்திக்க திட்டமிட்டாரா அல்லது வங்கதேச அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டிருந்தாரா என்ற கோணத்திலும், என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சீனாவிற்கும் ஜோதி சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி பாகிஸ்தானில் இருந்தபோது அவருக்கு ஏகே 47 துப்பாக்கியுடன் 6 பேர் பாதுகாப்பில் இருந்தனர் என ஸ்காட்லாந்து யூடியூபர் நேரில் பார்த்ததாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த வீடியோ பாகிஸ்தானில் ஜோதிக்கு கிடைத்த சிறப்பு வரவேற்பு குறித்த உண்மையை வெளிப்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. இது பல்வேறு சந்ததேகங்களை கிளப்பியுள்ள நிலையில், பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகளை அவர் சந்தித்ததாகவும், இந்தியாவுக்கு வந்த பிறகும் அவர்களிடம் ஜோதி தொடர்பில் இருந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு சாதாரண இந்திய யூடியுபருக்கு பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்? பாகிஸ்தானுக்கும் ஜோதிக்கும் என்ன தொடர்பு? உண்மையில் ஜோதி இந்தியாவைச் சேர்ந்தவரா அல்லது இந்திய அடையாளத்தை மட்டும் வைத்துள்ளவரா? போன்ற பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜோதிக்கும் கேரள முதலமைச்சரின் மருமகனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதாவது கேரளாவுக்கு ஜோதி சுற்றுலா பயணமாக வந்த போது, அவருக்கு முழுக்க முழுக்க கேரள மாநில சுற்றுலாத் துறை ஸ்பான்சர் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. முக்கியமாக ஜோதியின் கண்ணூர் பயணத்தின் போது, சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ள முதலமைச்சர் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ் தான் அவருக்கு ஸ்பான்சர் செய்ததாகவும், இருவரும் சந்தித்ததாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், அதன் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாகக் குற்றச்சாட்டபட்ட ஜோதிக்கும், கேரள முதலமைச்சரான பினராயி விஜயனின் மருமகனுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்ற பாஜகவின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.