நேபாளத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மோசமான பாதிப்பு
நேபாளத்தின் கோஷி, மாதேஸ், பாக்மதி, கண்டகி மற்றும் லும்பினி உள்ளிட்ட ஏழு மாகாணங்களில் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி, பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக, கடந்த 3 ஆம் தேதி முதல் கிழக்கு நேபாளத்தில் பெய்த கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள்
உயிரிழந்தவர்களில், இலம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாகச் சேதம் ஏற்பட்டுள்ளது. இலம் மாவட்டத்தின் சூர்யோதயா நகராட்சியின் மனேபன்ஜியாங்கில் ஐந்து பேரும், படேகான், மன்செபுங், டியூமா, துசுனி, ரத்மேட் மற்றும் கோசாங் ஆகிய பகுதிகளில் ஒன்பது பேரும் உயிரிழந்ததாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். மீட்புப் பணிகளுக்காக நேபாள ராணுவம் ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ராணுவத்தினர் ஏராளமானோரை மீட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு
சாலைகள் சேதமடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலையின் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. நிலச்சரிவில் மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மோசமான பாதிப்பு
நேபாளத்தின் கோஷி, மாதேஸ், பாக்மதி, கண்டகி மற்றும் லும்பினி உள்ளிட்ட ஏழு மாகாணங்களில் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி, பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக, கடந்த 3 ஆம் தேதி முதல் கிழக்கு நேபாளத்தில் பெய்த கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள்
உயிரிழந்தவர்களில், இலம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாகச் சேதம் ஏற்பட்டுள்ளது. இலம் மாவட்டத்தின் சூர்யோதயா நகராட்சியின் மனேபன்ஜியாங்கில் ஐந்து பேரும், படேகான், மன்செபுங், டியூமா, துசுனி, ரத்மேட் மற்றும் கோசாங் ஆகிய பகுதிகளில் ஒன்பது பேரும் உயிரிழந்ததாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். மீட்புப் பணிகளுக்காக நேபாள ராணுவம் ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ராணுவத்தினர் ஏராளமானோரை மீட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு
சாலைகள் சேதமடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலையின் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. நிலச்சரிவில் மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.