சீனாவில் யான் என்ற 29 வயது நபர் மதுபோதையில் 15 செ.மீ நீளமுள்ள கரண்டியை விழுங்கியுள்ளார். 6 மாதங்களாக அது ஒரு கனவு என நினைத்தே வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் இவருக்கு வயிற்று வலி ஏற்படவே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்ததில் உண்மை தெரிந்துள்ளது.
சீனாவை சேர்ந்த யான் என்ற 29 வயது நபருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உணவு சாப்பிடும்போது பிளாஸ்டிக்கை விழுங்கியிருக்கலாம் என அவர் சந்தேகித்துள்ளார். இதனால் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு எண்டோஸ்கோபி செய்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவரது சிறுகுடலின் மேல் பகுதியில் சுமார் 15 செ.மீ. அளவிலான பீங்கான் கரண்டி சிக்கியிருப்பதைக் கண்டனர்.
மேலும் இதனை அறிந்த யான், கடந்த ஜனவரி மாதத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார். அப்போது, தாய்லாந்தில் தான் தங்கியிருந்த விடுதி அறையில் போதையில் இருந்தபோது, கரண்டியைப் பயன்படுத்தி வாந்தியைத் தூண்ட முயன்றதாகவும், அப்போது தவறுதலாக கரண்டி வாயிற்குள் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த நிகழ்வு வெறும் கனவாக இருக்கும் என நினைத்து வந்ததாகவும், வயிற்று வலி ஏற்பட்டதால் மட்டுமே மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை இன்றில் அவரது வயிற்றில் இருந்து கரண்டியை எடுக்க முயன்றுள்ளனர். அனால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால், 90 நிமிடங்கள் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் அந்த கரண்டி அகற்றப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் தேதி அன்று வெற்றிகரமாக கரண்டி அகற்றப்பட்ட பிறகு, யான் நல்ல ஆரோக்கியத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து பேசிய அவர், எந்த பாதிப்பும் ஏற்படாமல், தற்செயலாகக் கரண்டி கண்டுபிடிக்கப்பட்டதை எண்ணி மிகுந்த நிம்மதி அடைவதாக தெரிவித்துள்ளார்.
சீனாவை சேர்ந்த யான் என்ற 29 வயது நபருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உணவு சாப்பிடும்போது பிளாஸ்டிக்கை விழுங்கியிருக்கலாம் என அவர் சந்தேகித்துள்ளார். இதனால் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு எண்டோஸ்கோபி செய்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவரது சிறுகுடலின் மேல் பகுதியில் சுமார் 15 செ.மீ. அளவிலான பீங்கான் கரண்டி சிக்கியிருப்பதைக் கண்டனர்.
மேலும் இதனை அறிந்த யான், கடந்த ஜனவரி மாதத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார். அப்போது, தாய்லாந்தில் தான் தங்கியிருந்த விடுதி அறையில் போதையில் இருந்தபோது, கரண்டியைப் பயன்படுத்தி வாந்தியைத் தூண்ட முயன்றதாகவும், அப்போது தவறுதலாக கரண்டி வாயிற்குள் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த நிகழ்வு வெறும் கனவாக இருக்கும் என நினைத்து வந்ததாகவும், வயிற்று வலி ஏற்பட்டதால் மட்டுமே மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை இன்றில் அவரது வயிற்றில் இருந்து கரண்டியை எடுக்க முயன்றுள்ளனர். அனால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால், 90 நிமிடங்கள் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் அந்த கரண்டி அகற்றப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் தேதி அன்று வெற்றிகரமாக கரண்டி அகற்றப்பட்ட பிறகு, யான் நல்ல ஆரோக்கியத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து பேசிய அவர், எந்த பாதிப்பும் ஏற்படாமல், தற்செயலாகக் கரண்டி கண்டுபிடிக்கப்பட்டதை எண்ணி மிகுந்த நிம்மதி அடைவதாக தெரிவித்துள்ளார்.