இந்து அமைச்சர் மீது தாக்குதல்
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மத விவகாரங்களுக்கான இணையமைச்சருமான கீல் தாஸ் கோஹிஸ்தானி நேற்று தட்டா மாவட்டம் வழியாக வாகனம் ஓட்டிச் சென்றபோது, அந்நாட்டின் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் அமைச்சரின் வாகனத்தின் மீது தக்காளி மற்றும் உருளைக்கிழங்குகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் கோஹிஸ்தானி காயமின்றி தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கோஹிஸ்தானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் கூறினார்.
விசாரணைக்கு உத்தரவு
தகவல் துறை அமைச்சர் அட்டா தரார், சிந்து காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) குலாம் நபி மேமனிடமிருந்து சம்பவம் குறித்த விவரங்களையும், மத்திய உள்துறை செயலாளரிடமிருந்து அறிக்கையையும் கோரியுள்ளார். மேலும், சிந்து மாகாண முதலமைச்சர் சையத் முராத் அலி ஷாவும் இந்தச் செயலை கடுமையாகக் கண்டித்துள்ளார். சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை என்று ஷா ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு துணை காவல் கண்காணிப்பாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். கோஹிஸ்தானி சிந்து மாகாணத்தின் ஜாம்ஷோரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு ஐந்து ஆண்டு காலத்திற்கும் பணியாற்றிய பிறகு, அவர் 2024 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பாகிஸ்தானில் இந்து அமைச்சர் மீதான தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மத விவகாரங்களுக்கான இணையமைச்சருமான கீல் தாஸ் கோஹிஸ்தானி நேற்று தட்டா மாவட்டம் வழியாக வாகனம் ஓட்டிச் சென்றபோது, அந்நாட்டின் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் அமைச்சரின் வாகனத்தின் மீது தக்காளி மற்றும் உருளைக்கிழங்குகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் கோஹிஸ்தானி காயமின்றி தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கோஹிஸ்தானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் கூறினார்.
விசாரணைக்கு உத்தரவு
தகவல் துறை அமைச்சர் அட்டா தரார், சிந்து காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) குலாம் நபி மேமனிடமிருந்து சம்பவம் குறித்த விவரங்களையும், மத்திய உள்துறை செயலாளரிடமிருந்து அறிக்கையையும் கோரியுள்ளார். மேலும், சிந்து மாகாண முதலமைச்சர் சையத் முராத் அலி ஷாவும் இந்தச் செயலை கடுமையாகக் கண்டித்துள்ளார். சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை என்று ஷா ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு துணை காவல் கண்காணிப்பாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். கோஹிஸ்தானி சிந்து மாகாணத்தின் ஜாம்ஷோரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு ஐந்து ஆண்டு காலத்திற்கும் பணியாற்றிய பிறகு, அவர் 2024 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பாகிஸ்தானில் இந்து அமைச்சர் மீதான தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.