பாமகவில் கடந்த சில நாட்களாகவே அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. தந்தை மகன் அதிகார மோதலால் பாமக நிர்வாகிகளிடையே குழப்பமாக சூழல் நிலவி வருகிறது.
முடிந்த போனதை பேசாதீர்
தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், தந்தை மகன் இடையே சமாதானம் ஏற்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜூன் 5ம் தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் ராமதாஸை, அன்புமணி சந்தித்தார். இந்த சமரச பேச்சுவார்த்தையில் சமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சந்திப்பு முடிந்தவுடன் அன்புமணி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்திப்பு முடிந்தவுடன் காரில் புறப்பட்டு சென்றார்.
ராமதாஸ்- அன்புமணி இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அன்புமணி உடனான பிரச்சனை குறித்த கேள்விக்கு தீர்வு என்று ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை என பதில் அளித்தார். மேலும், முகுந்தன் குறித்த கேள்விக்கு, முடிந்து போன விஷயத்தை பேசாதீர், இனி நடக்கப்போவதை குறித்து பேசுங்கள் என்றார்.
அன்புமணிக்கு மீண்டும் பதவி?
பாஜக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணியை முடிவு செய்ய நேரம் வரவில்லை, கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல எனவும் விளக்கம் அளித்தார். அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா என்பதை பற்றி பின்னர் சொல்கிறேன் என தெரிவித்தார்.
மேலும், முடிந்துபோன விஷயங்களை பேச வேண்டாம். இனி நடக்கப் போவதை பேசுவோம். பாமகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு ஏற்படும். எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது. தீர்வு இல்லாமல் எதுவுமில்லை. யாருடன் கூட்டணி என்பது விரைவில் பேசி முடிவு செய்யப்படும். நீங்கள் நினைக்கும் கூட்டணியில் பாமக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
முடிந்த போனதை பேசாதீர்
தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், தந்தை மகன் இடையே சமாதானம் ஏற்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜூன் 5ம் தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் ராமதாஸை, அன்புமணி சந்தித்தார். இந்த சமரச பேச்சுவார்த்தையில் சமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சந்திப்பு முடிந்தவுடன் அன்புமணி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்திப்பு முடிந்தவுடன் காரில் புறப்பட்டு சென்றார்.
ராமதாஸ்- அன்புமணி இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அன்புமணி உடனான பிரச்சனை குறித்த கேள்விக்கு தீர்வு என்று ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை என பதில் அளித்தார். மேலும், முகுந்தன் குறித்த கேள்விக்கு, முடிந்து போன விஷயத்தை பேசாதீர், இனி நடக்கப்போவதை குறித்து பேசுங்கள் என்றார்.
அன்புமணிக்கு மீண்டும் பதவி?
பாஜக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணியை முடிவு செய்ய நேரம் வரவில்லை, கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல எனவும் விளக்கம் அளித்தார். அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா என்பதை பற்றி பின்னர் சொல்கிறேன் என தெரிவித்தார்.
மேலும், முடிந்துபோன விஷயங்களை பேச வேண்டாம். இனி நடக்கப் போவதை பேசுவோம். பாமகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு ஏற்படும். எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது. தீர்வு இல்லாமல் எதுவுமில்லை. யாருடன் கூட்டணி என்பது விரைவில் பேசி முடிவு செய்யப்படும். நீங்கள் நினைக்கும் கூட்டணியில் பாமக இருக்கும் எனவும் தெரிவித்தார்.