நான் தான் தலைவர் பாமகவுக்கு தலைவர் - அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்
ராமதாஸ் தனது கொள்கை வழிகாட்டி மட்டுமல்ல - குலதெய்வம் என தெரிவித்துள்ள அன்புமணி, பாமகவுக்கு தானே தலைவர் எனவும் அறிவித்துள்ளார்.
ராமதாஸ் தனது கொள்கை வழிகாட்டி மட்டுமல்ல - குலதெய்வம் என தெரிவித்துள்ள அன்புமணி, பாமகவுக்கு தானே தலைவர் எனவும் அறிவித்துள்ளார்.
பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். நிறுவனரும், தலைவரும் மாறி, மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், பாமகவின் தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தே.மு.தி.க-விற்கு ஏற்கனவே 2 முறை எம்.பி. பதவி வந்த போது அன்புமணிக்கும், ஜி.கே.வாசனுக்கும் கொடுத்தார்கள். தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. இ.பி.எஸ் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
”என்னைப் பொறுத்தவரை நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியல. எதனால் என்னை பதவியிலிருந்து நீக்கினார்கள்” என அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் மனமுடைந்து பேசியுள்ளார்.
மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாமக சித்திரை முழு நிலவு மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இம்மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இணைந்து பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி.-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப் பட்டுள்ளது என திலகபாமா சாடல்
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
முகுந்தன் இளைஞர் அணித் தலைவராக அறிவிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்துவிட்டபோதும் கட்சிப் பணிகளில் தலைகாட்டாமல் இருப்பது மட்டுமின்றி, ஆண்டுதோறும் வெளியிடப்படும் பாமக நிழல்நிதி அறிக்கை வெளியீட்டிலும்கூட அவர் கலந்துகொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா? அன்புமணி
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாசுக்கும் - அன்புமணிக்கும் இடையே மீண்டும் வாதம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவையா? எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது என மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"
ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அனைவரும் வெட்கபட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருக்கும் பாமக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.
பாமக-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முகுந்தன் விலகுவதாக தகவல்.
ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து மோதல் வெடித்த நிலையில், ராமதாஸை சந்திக்க தைலாபுரம் விரைந்தார் அன்புமணி.
டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் மத்திய மாநில இரு அரசுகளும் மக்களை ஏமாற்றுகின்றனர். திமுக அரசு நாடகம் ஆடுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.