தமிழ்நாடு

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விபரீதம்...கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது

தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விபரீதம்...கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது
மனைவியால் கல்லை போட்டு கொல்லப்பட்ட கணவர்
விவாகரத்து நோட்டீஸ்

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துசாமி என்பவரது மகள் ரேவதி(34). இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல்(48) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு சுதிக்சன்(13) மற்றும் கபிலேஷ் (11) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தங்கவேலுவிற்கும் ரேவதிக்கும் இடையே இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரேவதி தனது கணவரை பிரிந்து மல்லன் குழியில் உள்ள தனது தந்தை வீட்டில் இரு மகன்களுடன் வசித்து வந்தார். இதற்கிடையே ரேவதி விவாகரத்து கேட்டு தங்கவேலுவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த தங்கவேல் நேற்று சூரியம்பாளையத்தில் இருந்து தாளவாடி மலைப்பகுதிக்கு சென்று தனது மனைவி ரேவதியிடம் இரு மகன்களையும் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.

கணவனை கொன்ற மனைவி கைது

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதில் ஆத்திரமடைந்த ரேவதி அருகே இருந்த கல்லை எடுத்து தனது கணவரின் தலை மீது போட்டதில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தாளவாடி போலீசார் ரேவதியிடம் விசாரணை நடத்தியபோது, தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது அடுத்து தாளவாடி போலீசார் ரேவதி மீது கொலை வழக்கு பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர். கணவன் தலையில் மனைவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் தாளவாடி மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.