K U M U D A M   N E W S

சிறை

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ரூ. 60 கோடி தங்க நகை மோசடி: ART நிறுவன வழக்கில் மேலும் 4 பேர் கைது!

பாதி விலைத் தங்கம், வாரா வட்டி என கவர்ச்சிகரமான திட்டங்களால் பொதுமக்களிடம் ரூ. 60 கோடி மோசடி செய்த ART Jewellers நிறுவன வழக்கில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளனர்

200 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டிய வழக்கு: இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!

இங்கிலாந்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023ல் மரத்தை வெட்டிய கிரகாம், காருதெர்ஸ் இருவரும் அதனை வீடியோ ஆகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

POCSO வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

POCSO வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருவில்லிபுத்தூர் குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள்… விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்

வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

எம்எஸ்சி எல்சா-3 கப்பல் விபத்து: எம்எஸ்சியின் அகிடேட்டா-2 கப்பலை சிறை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு!

எம்எஸ்சி எல்சா-3 கப்பலில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், எம்எஸ்சியின் மற்றொரு கப்பலான அகிடேட்டா-II கப்பலையும் சிறை பிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணன்... 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபணமானதால், குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை!

கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கு- ஏடிஜிபி சிறையில் அடைப்பு

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் வரை சிறை - மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் கடன் வசூல் ஒழுங்கு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.