சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் மைனர் அலி. இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள பேக் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 19ஆம் தேதி இரவு இவரிடம் மண்ணடியைச் சேர்ந்த முகமது என்பவர் ரூ.2.70 லட்சம் பணத்தை கொடுத்து ஏடிஎம் மூலம் வங்கி கணக்கில் செலுத்தும்படி அனுப்பி வைத்தார்.
ஹவாலா பணம் கொள்ளை
சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள ஐஓபி வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்ய சென்றார்.அப்போது ஏடிஎம் வாசலில் வைத்து அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து மைனர் அலியை தாக்கி விட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர். மேலும் மைனர் அலியின் பைக்கையும் டோ செய்து திருடி சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மைனர் அலியிடம் புகாரை போலீசார் பெற்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஹவாலா பணம் என விசாரணையில் தெரியவந்தது.
முன்னாள் காவலர் கைது
கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பறித்துச்சென்ற பைக் எண்ணை வைத்து தேடியபோது அயனாவரத்தில் அந்த திருடு போன பைக் நிறுத்தி இருந்தது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி மணிகண்டன், கணேஷ்குமார், பாலகிருஷ்ணன் ஆகிய மூவரை கைது செய்தனர்.இதில் மணிகண்டன் என்பவர் முன்னாள் காவலர் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹவாலா பணம் என்பதால் புகார் தர முன்வர மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும், அவரது பைக்கையும் திருடி சென்றதால் புகார் அளிக்கப்பட்டு சிக்கியதாக தெரிவித்தனர்.
தரகர் மூலம் தகவல்
குறிப்பாக ஹவாலா பணம் கொண்டுவரும் நபர்களின் சட்டை வாகன பதிவெண் உள்ளிட்டவை தங்களுக்கு துபாயில் உள்ள தரகர் மூலமாக தகவல் வரும் எனவும், அதுவும் குறிப்பிட்ட நபர்களின் ஹவாலா பணம் குறிப்பிட்ட ஏடிஎம் மையங்களில் தான் நிரப்பப்படும் என்பதையும் தகவல் தெரிவிப்பார்கள் எனவும் வாக்குமூலம் அளித்தனர்.
அவ்வாறு கொள்ளையடித்தால் தரகருக்கு பாதி பணம் சென்றுவிட்டு மீதி பணத்தை தாங்கள் பங்கு பிரித்துக் கொள்வோம் எனவும் அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். ஹவாலா பணத்தை ஏடிஎம்மில் நிரப்பினால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 150 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி மைனர் அலியிடம் மூன்று லட்சம் பணம் இருப்பது தெரியவந்து பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டபோது அவரது பணம் வண்டியின் டிக்கியின் உள்ளே இருந்ததால் அவரது இருசக்கர வாகனத்தை திருடி சென்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இதே போல சென்னையில் எட்டு முறை ஹவாலா பணம் கொண்டு சென்ற நபர்களிடம் பணம் பறித்ததாகவும், ஹவாலா பணம் என்பதால் யாரும் புகார் அளிக்க முன்வராததால் மீண்டும் பணம் பறிப்பில் ஈடுபட்டு சிக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களுக்கு தகவல் கொடுத்த அந்த துபாய், முக்கிய தரகர் யார் என்பது குறித்து கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹவாலா பணம் கொள்ளை
சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள ஐஓபி வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்ய சென்றார்.அப்போது ஏடிஎம் வாசலில் வைத்து அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து மைனர் அலியை தாக்கி விட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர். மேலும் மைனர் அலியின் பைக்கையும் டோ செய்து திருடி சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மைனர் அலியிடம் புகாரை போலீசார் பெற்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஹவாலா பணம் என விசாரணையில் தெரியவந்தது.
முன்னாள் காவலர் கைது
கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பறித்துச்சென்ற பைக் எண்ணை வைத்து தேடியபோது அயனாவரத்தில் அந்த திருடு போன பைக் நிறுத்தி இருந்தது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி மணிகண்டன், கணேஷ்குமார், பாலகிருஷ்ணன் ஆகிய மூவரை கைது செய்தனர்.இதில் மணிகண்டன் என்பவர் முன்னாள் காவலர் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹவாலா பணம் என்பதால் புகார் தர முன்வர மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும், அவரது பைக்கையும் திருடி சென்றதால் புகார் அளிக்கப்பட்டு சிக்கியதாக தெரிவித்தனர்.
தரகர் மூலம் தகவல்
குறிப்பாக ஹவாலா பணம் கொண்டுவரும் நபர்களின் சட்டை வாகன பதிவெண் உள்ளிட்டவை தங்களுக்கு துபாயில் உள்ள தரகர் மூலமாக தகவல் வரும் எனவும், அதுவும் குறிப்பிட்ட நபர்களின் ஹவாலா பணம் குறிப்பிட்ட ஏடிஎம் மையங்களில் தான் நிரப்பப்படும் என்பதையும் தகவல் தெரிவிப்பார்கள் எனவும் வாக்குமூலம் அளித்தனர்.
அவ்வாறு கொள்ளையடித்தால் தரகருக்கு பாதி பணம் சென்றுவிட்டு மீதி பணத்தை தாங்கள் பங்கு பிரித்துக் கொள்வோம் எனவும் அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். ஹவாலா பணத்தை ஏடிஎம்மில் நிரப்பினால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 150 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி மைனர் அலியிடம் மூன்று லட்சம் பணம் இருப்பது தெரியவந்து பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டபோது அவரது பணம் வண்டியின் டிக்கியின் உள்ளே இருந்ததால் அவரது இருசக்கர வாகனத்தை திருடி சென்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இதே போல சென்னையில் எட்டு முறை ஹவாலா பணம் கொண்டு சென்ற நபர்களிடம் பணம் பறித்ததாகவும், ஹவாலா பணம் என்பதால் யாரும் புகார் அளிக்க முன்வராததால் மீண்டும் பணம் பறிப்பில் ஈடுபட்டு சிக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களுக்கு தகவல் கொடுத்த அந்த துபாய், முக்கிய தரகர் யார் என்பது குறித்து கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.