தமிழ்நாடு

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை சாலையில் சுற்றுலாப் பயணிகள் வேன் பாறையில் மோதி கவிழ்ந்த விபத்தில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் படுகாயம்!
சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் படுகாயம்!
மதுரை விளாச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் 21 பேர் கொடைக்கானலுக்கு வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்த பின் வேன் மூலம் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

வேன் கொடைக்கானல் மலைச்சாலையில் டம் டம் பாறை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிவேகமாக வந்த வேன் சாலையின் இடது புறம் இருந்த பாறையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.வேன் இடிபாடுக்குள் காயத்துடன் சிக்கி தவித்தவர்களை மலைச்சாலையில் வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் மீட்டனர்.

அதிவேகமாக பாறையில் மோதி வேன் கவிழ்ந்ததால் வேனில் பயணம் செய்த 13 சிறார்கள் உட்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் சுற்றுலா பயணிகளில் வாகனங்களில் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்

விபத்து குறித்து தகவல் அறிந்து மருத்துவமனையில் குவிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களை விரைவாக வரவழைத்து காயம் அடைந்தவர்களை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கு உறுதுணையாக செயல்பட்டனர்.

இதனிடையே காயம் பட்டவர்களின் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் மலை சாலையில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது