தமிழ்நாடு

4 ஆண்டுகளாக தமிழ்நாட்டை முதலமைச்சர் சீரழித்துள்ளார் - எல். முருகன் விமர்சனம்

4 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சீரழித்து செயல்படாத முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

4 ஆண்டுகளாக தமிழ்நாட்டை முதலமைச்சர் சீரழித்துள்ளார் - எல். முருகன் விமர்சனம்
4 ஆண்டுகளாக தமிழ்நாட்டை முதலமைச்சர் சீரழித்துள்ளார் - எல். முருகன் விமர்சனம்
சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவல்துறையை கையில் வைத்து இருக்கும் முதலமைச்சர் காவல் துறை அமைச்சராக இருக்கிறாரா? இல்லையா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. புகார் கொடுக்க காவல் துறைக்கு செல்லவே மக்கள் மத்தியில் பயம் வந்துள்ளது. சிவகங்கையில் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்துள்ளார். அதே போல் திருத்தணி அருகே புகார் கொடுக்க சென்ற கார்ப்பிணியை தாக்கி உள்ளனர்.

காவல் துறையின் மொத்த செயல்பாடுகளும் பூஜ்ஜியமாக இருப்பதை காட்டுகிறது. தமிழக முதலமைச்சர் செயல்படாத முதலமைச்சராக உள்ளார். காவல் துறையை கையில் வைத்து ஒரு வேலையும் செய்யாமல் சட்டம் ஒழுங்கு சீரழித்து கொண்டு இருக்கிறது. செயின் பறிப்பு, போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்ல முடியாத நிலை, கஞ்சா போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து விட்டன. இதை கவனிக்க வேண்டிய முதலமைச்சர் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டை சீரழித்து விட்டார். தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாத அரசாங்கமாக உள்ளது. முழுமையாக தோல்வி அடைந்த அரசாக உள்ளது. உள்துறையை கையில் வைத்து இருக்கும் முதலமைச்சர் தோல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். முதலமைச்சர் போடும் உத்தரவுகளை அதிகாரிகள் கேட்பதில்லை.

கூட்டணி குறித்து அமித்ஷா தெளிவாக கூறியுள்ளார். அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி பேசி அறிவிப்பார்கள். கட்சியில் ஒவ்வொருக்கும் ஒரு கருத்துகள் இருக்கும். ஆனால், கட்சி தலைமை சரியான நேரத்தில் கூட்டணியில் எந்த கட்சிகள் சேர்வது என்பதை தேசிய தலைமை முடிவெடுக்கும். திமுகவை விட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே ஒரே கொள்கை. எல்லாமே கூட்டல் கழித்தல் கணக்கு தான். தேர்தல் நேரத்தில் தான் யார் பலம் என்பது தெரியும். திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால் ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைந்து செயல்பட வேண்டும்.

திருமாவளவனுக்கு தைரியம் இருந்ததால் ஸ்டாலினிடம் துணை முதல்வர் கேட்க முடியுமா வெட்டியாக பேசி வருகிறார். தலித் மக்களுக்கான பிரச்சினை குறித்து அறிவாலயத்தில் கேள்வி கேட்காமல் கூட்டணிக்காக அமைதியாக இருக்கிறார்.

பா.ஜ.க - அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. எங்கள் கூட்டணி திமுகவை வீட்டிற்கு அனுப்ப கூடியதாக இருக்கிறது. திமுக கூட்டணி உடைகிற நிலையில் உள்ளதாக அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.