தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கெத்தாக ரீல்ஸ்... வருத்தம் தெரிவித்த இளைஞர்கள்

அபராதம் கட்ட சென்று, போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கெத்தா ரீல்ஸ் வெளிட்ட இளைஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்

 போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கெத்தாக ரீல்ஸ்... வருத்தம் தெரிவித்த இளைஞர்கள்
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கெத்தாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த இளைஞர்கள்
இளைஞர்களுக்கு அபராதம்

சேலம்- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் மூன்று பேர் இருசக்கர வாகனத்தை அதி வேகமாக இயக்கி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. நெடுஞ்சாலை ரோந்து படையினரும், கருமத்தம்பட்டி காவல் துறையினரும் அதி வேகமாக வாகனத்தை இயக்கிய இளைஞர்கள் மூன்று பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய் ,டிக்ஸன் மற்றும் தமிழ் நாதன் என்பது தெரியவந்தது. இவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருவதும் மூன்று பேரும் நண்பர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூன்று பேரின் முகவரியினை பெற்றுக்கொண்ட காவல்துறை அவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தனர்.


கெத்தாக வீடியோ பதிவு

ஆனால் இளைஞர்கள் காவல் நிலையத்திற்கு வந்து சென்றதை ரிலீஸ் ஆக பதிவிட்டு கெத்தாக அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.இந்நிலையில் சமூக வலைதள காட்சிகளை பார்த்த கோவை கருமத்தம்பட்டி காவல்துறையினர் மீண்டும் அந்த இளைஞர்கள் மூன்று பேரையும் அழைத்து அவர்கள் மீது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியதாக வழக்குப்பதிவு செய்ததுடன், மூன்று பேரின் இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மூன்று இருசக்கர வாகனங்களும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் இளைஞர்களின் பெற்றோர் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து மூன்று இளைஞர்களும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வருத்தம் தெரிவித்து வீடியோ

மேலும் இளைஞர்கள் மூன்று பேரும் தங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் இரு சக்கர வாகனங்களை வேகமாக இயக்கியதும் காவல் நிலைய வளாகத்தில் ரிலீஸ் பதிவிட்டு அதை பகிர்ந்ததும் தவறு என உணர்ந்திருப்பதாகவும் எங்களை பார்த்து யாரும் இப்படி செய்யாதீர்கள் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.