தமிழ்நாடு

அதிமுக முன்னாள் நகர செயலாளர் கொலை: 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

அதிமுக முன்னாள் நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுக முன்னாள் நகர செயலாளர் கொலை: 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
அதிமுக முன்னாள் நகர செயலாளர் கொலை: 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
திருவண்ணாமலை அதிமுக முன்னாள் நகர செயலாளர் கனகராஜ் என்பவர் கடந்த 2017 ஆண்டு முன்விரோதம் காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருமஞ்சனம் கோபுரம் அருகே திமுக பிரமுகர் பங்க் பாபு மற்றும் அவரது கூட்டாளிகளான ராஜா, சரவணன் மூன்று பேரும் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கனகராஜ் என்பவரை கோவில் முன்பு பட்டப்பகலில் சரமாரியாக கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கனகராஜ் வெட்டி கொலை செய்த திமுக பிரமுகர் பங்க் பாபு உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர், தொடர்ந்து மூன்று மாதங்கள் கழித்து ஜாமினில் வெளியே வந்த அறிந்த கனகராஜின் ஆதரவாளர்கள் பழிக்கு பழிவாங்க பங்க் பாபுவை நான்கு பேர் கொண்ட கும்பல் கடந்த 2020 ஆண்டு திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலை அருகே உள்ள டீக்கடையில் ஆள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த இரண்டு வழக்கும் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கனகராஜை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, ஏற்கனவே பங்க் பாபுவை வெட்டி படுகொலை செய்த நிலையில், ராஜா மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி மதுசூதனன் கொலை குற்றவாளிகளான ராஜா மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பேருக்கும் இரண்டு ஆயுள் தண்டனை மற்றும் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.