ஞானப்பழம் என்ற படத்தில் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமானவர் பா. விஜய். தமிழ் திரைப்படங்களில் பல ஹிட் பாடல்கள் எழுதியுள்ளார். 2005 ஆம் ஆண்டு நடிகர் சேரன் நடித்த ஆட்டோகிராப் திரைப்படத்தின் ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் என்ற தேசிய விருதையும் பெற்று மிகவும் பிரபலமானார். பாடலாசிரியர் மட்டுமல்லாது பல்வேறு கவிதை புத்தகங்களையும் எழுதி கவிஞரும் எழுத்தாளரான பா. விஜய், ஸ்ட்ராபெரி, இளைஞன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமானார். தேசிய விருது பெற்ற பாடல் ஆசிரியரான பா.விஜய் தயாரிப்பாளர் ஒருவருக்கு பாடல் எழுதி தருவதாக கூறி சிக்கிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அவர் மீது பண மோசடி புகார் வரை காவல் நிலையத்திற்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் வசிப்பவர் அருள்தாஸ், அவரது மனைவி லலிதா. இவர்கள் சினிமா மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்களாக உள்ளனர். அருள்தாஸ் - லலிதா தம்பதி ஒரு பெயரிடப்படாத புதிய திரைப்பட பாடல் இயற்றுவதற்காக பாடலாசிரியர் பா.விஜய்யை அணுகி முன் தொகையாக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. பாடலாசிரியர் பா.விஜய் பாடல் வரிகள் எழுதுவதாக கூறி ரொக்கப் பணத்தை பெற்றுள்ளார். ஆனால், பாடல் எழுதாததால் கொடுத்த முன் தொகையை திருப்பி தருமாறு அருள்தாஸ் - லலிதா தம்பதியினர் கேட்டதாகவும், அட்வான்ஸ் தொகையை எவ்வாறு திருப்பி தர முடியும் என பா விஜய் தரப்பில் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாடலாசிரியர் பா. விஜய் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 2024 ஆம் ஆண்டு இந்த தம்பதியினர் பிரியன் என்பவர் மூலம் அணுகினர். பாடல் எழுதுவதற்கு இரண்டு லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஸ்டூடியோவிற்கு இசையமைப்பதற்காக சென்றிருந்தேன். அப்பொழுது அந்த தம்பதியினர் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனால் பாடலை இசையமைக்கும் பணி நின்று விட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் திடீரென்று ஒன்றை வருடம் கழித்து ஐந்து நாட்கள் முன்பு லலிதா என்பவர் பேசியதாக கூறியுள்ளார். அந்தப் பாடல் தேவையில்லை எனக் கூறி அட்வான்ஸ் திருப்பி கேட்டதால் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். தான் அட்வான்ஸ் பணம் கொடுத்த இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவரும் பணத்தை பாதியாகவும் முழுமையாகவும் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் பாடல் எழுதுவதற்காக வாங்கிய பணத்தையும் திருப்பித் தருமாறு பெண் தயாரிப்பாளர் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்த தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் தமிழகத்திற்கு திரும்பியவுடன் இது குறித்து பேசி பணத்தை திருப்பி தருவதாக கூறிய நிலையிலும், அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜிபேயில் பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்புவேன் எனக் கூறி தரக்குறைவாக பேசியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா துறையிலும் சமூகத்திலும் நன்மதிப்பு கொண்ட என்னிடம் ரகளை செய்த அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா விஜய் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் பெண் தயாரிப்பாளர் லலிதா சின்னத்திரை சங்கம், எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் பா. விஜய் மீது புகார் அளித்ததாக கூறப்படுகிறது. சங்கங்களில் இருந்து அழைத்து பா.விஜய்யிடம் விளக்கம் கேட்டபோது, அட்வான்ஸ் தொகை டிடியாக திருப்பித் தருவதாகவும் தயாரிப்பாளர்கள் பெற்றுக் கொண்டதாக கடிதம் எழுதி தர வேண்டும் என்ற பா.விஜய் தரப்பில் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் லலிதா கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பா.விஜய் மீது புகார் அளித்துள்ளார். அட்வான்ஸ் தொகை பெற்றுக்கொண்டு பண மோசடி செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்திலிருந்து பாடலாசிரியர் பா.விஜய்யிடம் போலிசார் விசாரித்த போது, அட்வான்ஸ் தொகையான ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை டிடியாக எடுத்து அனுப்பி உள்ளதாகவும் மேலும் இந்த பணத்தைப் தயாரிப்பாளர் பெற்றுக் கொண்டதாக ஒரு கடிதம் காவல் நிலையத்திற்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மிகப்பெரிய பிரச்சனை ஆனதால் காவல் நிலையத்தில் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பா.விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ் தொகை டிடியை பெற்றுக் கொண்டு, அந்த தொகையைப் பெற்றுக் கொண்டேன் என தான் அனுப்பிய கடிதத்தில் தயாரிப்பாளர் லலிதா கையெழுத்து இட்டு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக பணத்தை திருப்பித் தருகிறேன் என தெரிவித்த போதும் அதற்குண்டான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறிய நிலையில் வேண்டுமென்றே தயாரிப்பாளர் லலிதா அவதூறு பரப்புவதாக பா. விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இரு தரப்பிலும் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற பாடல் ஆசிரியர் பாடல் ஒன்றை எழுதி அதற்காக அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு பரிதவித்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் வசிப்பவர் அருள்தாஸ், அவரது மனைவி லலிதா. இவர்கள் சினிமா மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்களாக உள்ளனர். அருள்தாஸ் - லலிதா தம்பதி ஒரு பெயரிடப்படாத புதிய திரைப்பட பாடல் இயற்றுவதற்காக பாடலாசிரியர் பா.விஜய்யை அணுகி முன் தொகையாக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. பாடலாசிரியர் பா.விஜய் பாடல் வரிகள் எழுதுவதாக கூறி ரொக்கப் பணத்தை பெற்றுள்ளார். ஆனால், பாடல் எழுதாததால் கொடுத்த முன் தொகையை திருப்பி தருமாறு அருள்தாஸ் - லலிதா தம்பதியினர் கேட்டதாகவும், அட்வான்ஸ் தொகையை எவ்வாறு திருப்பி தர முடியும் என பா விஜய் தரப்பில் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாடலாசிரியர் பா. விஜய் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 2024 ஆம் ஆண்டு இந்த தம்பதியினர் பிரியன் என்பவர் மூலம் அணுகினர். பாடல் எழுதுவதற்கு இரண்டு லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஸ்டூடியோவிற்கு இசையமைப்பதற்காக சென்றிருந்தேன். அப்பொழுது அந்த தம்பதியினர் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனால் பாடலை இசையமைக்கும் பணி நின்று விட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் திடீரென்று ஒன்றை வருடம் கழித்து ஐந்து நாட்கள் முன்பு லலிதா என்பவர் பேசியதாக கூறியுள்ளார். அந்தப் பாடல் தேவையில்லை எனக் கூறி அட்வான்ஸ் திருப்பி கேட்டதால் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். தான் அட்வான்ஸ் பணம் கொடுத்த இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவரும் பணத்தை பாதியாகவும் முழுமையாகவும் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் பாடல் எழுதுவதற்காக வாங்கிய பணத்தையும் திருப்பித் தருமாறு பெண் தயாரிப்பாளர் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்த தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் தமிழகத்திற்கு திரும்பியவுடன் இது குறித்து பேசி பணத்தை திருப்பி தருவதாக கூறிய நிலையிலும், அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜிபேயில் பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்புவேன் எனக் கூறி தரக்குறைவாக பேசியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா துறையிலும் சமூகத்திலும் நன்மதிப்பு கொண்ட என்னிடம் ரகளை செய்த அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா விஜய் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் பெண் தயாரிப்பாளர் லலிதா சின்னத்திரை சங்கம், எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் பா. விஜய் மீது புகார் அளித்ததாக கூறப்படுகிறது. சங்கங்களில் இருந்து அழைத்து பா.விஜய்யிடம் விளக்கம் கேட்டபோது, அட்வான்ஸ் தொகை டிடியாக திருப்பித் தருவதாகவும் தயாரிப்பாளர்கள் பெற்றுக் கொண்டதாக கடிதம் எழுதி தர வேண்டும் என்ற பா.விஜய் தரப்பில் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் லலிதா கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பா.விஜய் மீது புகார் அளித்துள்ளார். அட்வான்ஸ் தொகை பெற்றுக்கொண்டு பண மோசடி செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்திலிருந்து பாடலாசிரியர் பா.விஜய்யிடம் போலிசார் விசாரித்த போது, அட்வான்ஸ் தொகையான ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை டிடியாக எடுத்து அனுப்பி உள்ளதாகவும் மேலும் இந்த பணத்தைப் தயாரிப்பாளர் பெற்றுக் கொண்டதாக ஒரு கடிதம் காவல் நிலையத்திற்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மிகப்பெரிய பிரச்சனை ஆனதால் காவல் நிலையத்தில் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பா.விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ் தொகை டிடியை பெற்றுக் கொண்டு, அந்த தொகையைப் பெற்றுக் கொண்டேன் என தான் அனுப்பிய கடிதத்தில் தயாரிப்பாளர் லலிதா கையெழுத்து இட்டு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக பணத்தை திருப்பித் தருகிறேன் என தெரிவித்த போதும் அதற்குண்டான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறிய நிலையில் வேண்டுமென்றே தயாரிப்பாளர் லலிதா அவதூறு பரப்புவதாக பா. விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இரு தரப்பிலும் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற பாடல் ஆசிரியர் பாடல் ஒன்றை எழுதி அதற்காக அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு பரிதவித்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.