சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவருடைய மாமியார் சுந்தரவல்லி முதுகு தண்டு பிரச்னை தொடர்பாக கடந்த 4ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 6ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒருவர் டாக்டர் போலவே கழுத்தில் ஸ்டெதஸ் கோப் அணிந்து கொண்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டவர் 3-ல் உள்ள 3-வது மாடிக்கு சென்றார். அங்கு இருந்த சில நோயாளிகளை பார்த்ததாக தெரிகிறது. அப்போது அனைத்து நபர்களையும் தான் மருத்துவர் உங்களுடைய மருத்துவ சான்றிதழ்களை கொடுங்கள் என பார்த்து தங்களுக்கு என்ன பிரச்சனை ? என்ன செய்கிறது ? என்பது தொடர்பாக விசாரித்து அவர்களுக்கு அறிவுரையும் வழங்கி உள்ளார்.
இதனை நம்பிய காஞ்சனா குடும்பத்தினர் மருத்துவரிடம் சந்தேகங்களை கேட்டனர். போலியான மருத்துவர் அவர்களுக்கு அறிவுரை வழங்கியவுடன் அன்பாக பேசி உள்ளார். இதனை அடுத்து போலி மருத்துவர் வாருங்களேன் டீ சாப்பிடலாம் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தேநீர் வழங்கும் மாஸ்டரிடம் தான் மருத்துவர் எனவும், இவர்களுக்கு தேநீர் கொடுங்கள் எனவும் கூறியுள்ளார். டீ மாஸ்டரும் அவர்களுக்கு தேநீர் வழங்கி உள்ளார்.
அவர்கள் சாப்பிட்ட தேநீருக்கு அவரவர்கள் பணத்தை கொடுத்துள்ளனர். இதனை அடுத்து மதியம் உணவு வேலைக்கு செல்லும் பொழுது மருத்துவர் உணவு அருந்தும் ஏசி அறையில் அழைத்துச் சென்று உணவுகளையும் சாப்பிட வைத்துள்ளார். இதனை எல்லாம் பார்த்த காஞ்சனா குடும்பத்தினர் மிகவும் அக்கறை காட்டும் டாக்டர் என நம்பி அவர் சொன்னதை அனைத்தையும் தவறாமல் கேட்டுள்ளனர். இதெல்லாம் முடிந்த பிறகு இரவு 10 மணி அளவில் மருத்துவர் உட்காரும் அதே நாற்காலியில் உட்கார்ந்து அனைத்து கே ஷீட்டுகளையும் சரி பார்த்துவிட்டு சென்றுள்ளார்.
வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக சுந்தரவல்லியிடம் நாளை உங்களுக்கு அறுவை சிகிச்சை இருக்கிறது. காலையில் தயாராக இருங்கள் நான் வருகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். இதனிடையே காஞ்சனா சார் எனக்கும் தலைவலி தினம் தோறும் வருகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை என கூறியிருக்கிறார். அதற்கு அந்த போலி மருத்துவர் நாளை ஸ்கேன் செய்து விடலாம் என கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனை அடுத்து ஐந்தாம் தேதி வியாழக்கிழமை காலை ஆறு முப்பது மணி அளவில் மீண்டும் அதே டவர் 3 என்கிற இடத்திற்கு வந்து அவர்கள் இருக்கும் இடத்தில் மீண்டும் கேஸ் ஷீட்டை சரி பார்த்து விட்டு கல்லீரல் ஸ்கேன் எடுக்க வேண்டும் எனக் கூறி ஏழாவது மாடிக்கு காஞ்சனாவையும் அவரது மாமியார் சுந்தரவள்ளியும் அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த டவருக்கு அழைத்துச் சென்றவுடன் ஸ்கேன் எடுக்கும் பொழுது நகைகள் போடக்கூடாது எனவும் போலி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை நம்பிய காஞ்சனா குடும்பத்தினர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகை செல்போன் ஆகியவற்றை ஒரு பையில் போட்டுள்ளனர். உடனே அந்த போலி மருத்துவர் இந்த பையை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்திய போலி மருத்துவர் நான் என்னுடைய அறையில் வைத்து விட்டு வருகிறேன் எனக் கூறி அந்தப் பையை எடுத்துச் சென்ற மர்ம டாக்டர் அதோடு மறைந்து விட்டார்.
இப்பொழுது வருவார், அப்பொழுது வருவார், என வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்த காஞ்சனா மற்றும் மாமியார் சுந்தரவல்லி எதிர்பார்த்து, எதிர்பார்த்து மருத்துவர் வரவில்லை என்பது தெரிந்த உடன் மீண்டும் அவர்களுடைய இடத்திற்கே சென்றுள்ளனர். இதனை அடுத்து உண்மையான மருத்துவர் வந்து அவர்களை பார்த்தபொழுது நடந்தவற்றை கூறியுள்ளனர். இதுபோன்ற ஒரு மருத்துவரே கிடையாது எனவும் வந்தவர் மருத்துவரே இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், நகைகள் திருடு போனதை அடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் காஞ்சனா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள போலீசார் டவர் 3 மற்றும் ஏழாவது மாடியில் இருக்கக்கூடிய கல்லீரல் டவர் ஆகியவற்றில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். சிசிடிவி காட்சியில் வந்த மர்ம நபர் முகக் கவசம் அணிந்தபடி கழுத்தில் ஸ்டெடஸ் கோப் அணிந்து கொண்டு சுற்றி திரிந்ததும் தெரிய வந்திருக்கிறது.
மேலும், ஒவ்வொரு நோயாளிடம் கேஸ் ஷீட்டுகளை சரி பார்த்ததும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. இதனிடையே மருத்துவர்கள் எப்படி காப்பீடு கேட்பார்களோ அதே போன்று தங்களிடம் காப்பீடு திட்டம் இருக்கிறதா என கேட்டுவிட்டு போலி டாக்டர் ஒரு மின்னஞ்சலையும் கொடுத்திருக்கிறார். இந்த மின்னஞ்சலுக்கு தங்களுடைய தகவல்களை அனுப்புங்கள் நான் எடுத்து தருகிறேன் என போலியான வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். இதனை அடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காஞ்சனா குடும்பத்தினர் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மருத்துவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.