சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கிற்கு தாய் ஏர்லைன்ஸ் விமானம் அதிகாலை 1.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
விமானம் இயந்திர கோளாறு
ஆனால் விமான பாங்காக்கில் இருந்து வந்ததே தாமதமாக, நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தை இயக்கி வந்த விமானி, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதால், விமானத்தை பழுது பார்த்த பின்பே, மீண்டும் இயக்க முடியும் என்று குறிப்பு எழுதி வைத்து விட்டார்.
இதை அடுத்து விமானத்தில் தாய்லாந்து செல்வதற்காக வந்திருந்த 164 பயணிகளிடம், விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவித்து விமான நிலைய ஓய்வறையில் தங்க வைத்தனர்.
பயணிகள் தங்க வைப்பு
விமான பொறியாளர்கள் குழுவினர் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால் காலை 6 மணி வரையில் பழுது சரி செய்ய முடியவில்லை. இதை அடுத்து விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் 164 பேரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஒட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த விமானம் மீண்டும் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் இயந்திர கோளாறு
ஆனால் விமான பாங்காக்கில் இருந்து வந்ததே தாமதமாக, நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தை இயக்கி வந்த விமானி, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதால், விமானத்தை பழுது பார்த்த பின்பே, மீண்டும் இயக்க முடியும் என்று குறிப்பு எழுதி வைத்து விட்டார்.
இதை அடுத்து விமானத்தில் தாய்லாந்து செல்வதற்காக வந்திருந்த 164 பயணிகளிடம், விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவித்து விமான நிலைய ஓய்வறையில் தங்க வைத்தனர்.
பயணிகள் தங்க வைப்பு
விமான பொறியாளர்கள் குழுவினர் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால் காலை 6 மணி வரையில் பழுது சரி செய்ய முடியவில்லை. இதை அடுத்து விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் 164 பேரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஒட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த விமானம் மீண்டும் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.