வேலூரில் இருந்து ஒடுக்கத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
இதனை அறிந்த பொதுமக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனியார் பேருந்தின் ஓட்டுநர் சொல்போன் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்து அணைக்கட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.