அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரும் 7 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சில புல்லுருவிகள் என்னை ஏமாற்றி விட்டனர்
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கடந்த 2021 தேர்தலில் நான் ராஜபாளையம் தொகுதியில் வெற்றியை பறிகொடுத்தது ஒரு விபத்து. சில புல்லுருவிகளை நம்பினேன். அவர்கள் என்னை ஏமாற்றி விட்டனர். தற்போது களை எடுக்கப்பட்ட செழிப்பான பயிராக வலுவாக ராஜபாளையத்தில் அதிமுக உள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் கடை கோடி தொண்டன் நின்றாலும் வெற்றி பெறுவான்.
திமுக பாடி போன லாரி
கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வந்த மரபை மீறி திமுக வீடு வீடாகச் சென்று கேவலப்பட்டு, அசிங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறார்கள். 35 வயதுக்கு உட்பட்ட உறுப்பினர்கள் திமுகவில் யாருமே இல்லை. முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவில் உள்ளனர். திமுக பாடி போன லாரி. டயர் போன பேருந்து. இதனால் அந்த வண்டி ஓட வாய்ப்பு இல்லை.
திமுகவின் நாடகத்தை மக்கள் விரும்பவில்லை
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் திமுகவிடம் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்தது அதிமுக ஆட்சி. அதுபோன்று திமுக ஆட்சியில் எதுவும் செய்யாததால் அதிமுகவை பாஜகவின் அடிமை என முதல்வர் ஸ்டாலின் தூற்றுகிறார். கடந்த 1999 ஆம் ஆண்டு திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது பாஜக மதவாத கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா?
பாஜக பலமான கட்சி, அதிமுக மிக பலமான கட்சி. இரண்டு கட்சிகளுக்கும் அடித்தளம் பலமாக இருக்கிறது. இரு கட்சிகளும் இணைந்தால் ஆட்சியைப் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தால் பாஜகவை தீண்ட தகாத கட்சியாக முதல்வர் பிரகடனப்படுத்துகிறார். அவரது ஓரங்க நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது. எடப்பாடி பழனிசாமியின் எதார்த்தமான பேச்சை தான் மக்கள் விரும்புகிறார்கள். திமுகவின் நாடக அரசியலை மக்கள் விரும்பவில்லை.
நியாய விலை கடைகளில் எதுவும் இல்லை
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கொரோனா மற்றும் கஜா புயல் காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி தேவையான ஏற்பாடுகளை செய்து மக்களை காப்பாற்றினார். அம்மா மினி கிளினிக் திட்டத்தை செயல்படுத்தி கொரோனாவை விரட்டி அடித்தார்.
பேரிடர் காலத்திலும் நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து உணவு பொருட்களும் தடையின்றி வழங்கப்பட்டது. இன்று நியாய விலை கடைகளில் உணவுப் பொருட்கள் எதுவும் மக்களுக்கு கிடைப்பதில்லை. ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நியாய விலை கடைக்கு செல்ல வேண்டிய அரிசியை கேரளாவுக்கு கடந்துகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடத்தல்காரர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல உள்ளனர்.
பெட்ரோல் பங்கில் பெட்ரோல் டீசல் கிடைப்பதில்லை. அதுவும் வெளி சந்தையில் விற்கப்படுகிறது. இந்த கேவலமான ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்” என்றார்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சில புல்லுருவிகள் என்னை ஏமாற்றி விட்டனர்
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கடந்த 2021 தேர்தலில் நான் ராஜபாளையம் தொகுதியில் வெற்றியை பறிகொடுத்தது ஒரு விபத்து. சில புல்லுருவிகளை நம்பினேன். அவர்கள் என்னை ஏமாற்றி விட்டனர். தற்போது களை எடுக்கப்பட்ட செழிப்பான பயிராக வலுவாக ராஜபாளையத்தில் அதிமுக உள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் கடை கோடி தொண்டன் நின்றாலும் வெற்றி பெறுவான்.
திமுக பாடி போன லாரி
கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வந்த மரபை மீறி திமுக வீடு வீடாகச் சென்று கேவலப்பட்டு, அசிங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறார்கள். 35 வயதுக்கு உட்பட்ட உறுப்பினர்கள் திமுகவில் யாருமே இல்லை. முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவில் உள்ளனர். திமுக பாடி போன லாரி. டயர் போன பேருந்து. இதனால் அந்த வண்டி ஓட வாய்ப்பு இல்லை.
திமுகவின் நாடகத்தை மக்கள் விரும்பவில்லை
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் திமுகவிடம் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்தது அதிமுக ஆட்சி. அதுபோன்று திமுக ஆட்சியில் எதுவும் செய்யாததால் அதிமுகவை பாஜகவின் அடிமை என முதல்வர் ஸ்டாலின் தூற்றுகிறார். கடந்த 1999 ஆம் ஆண்டு திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது பாஜக மதவாத கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா?
பாஜக பலமான கட்சி, அதிமுக மிக பலமான கட்சி. இரண்டு கட்சிகளுக்கும் அடித்தளம் பலமாக இருக்கிறது. இரு கட்சிகளும் இணைந்தால் ஆட்சியைப் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தால் பாஜகவை தீண்ட தகாத கட்சியாக முதல்வர் பிரகடனப்படுத்துகிறார். அவரது ஓரங்க நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது. எடப்பாடி பழனிசாமியின் எதார்த்தமான பேச்சை தான் மக்கள் விரும்புகிறார்கள். திமுகவின் நாடக அரசியலை மக்கள் விரும்பவில்லை.
நியாய விலை கடைகளில் எதுவும் இல்லை
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கொரோனா மற்றும் கஜா புயல் காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி தேவையான ஏற்பாடுகளை செய்து மக்களை காப்பாற்றினார். அம்மா மினி கிளினிக் திட்டத்தை செயல்படுத்தி கொரோனாவை விரட்டி அடித்தார்.
பேரிடர் காலத்திலும் நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து உணவு பொருட்களும் தடையின்றி வழங்கப்பட்டது. இன்று நியாய விலை கடைகளில் உணவுப் பொருட்கள் எதுவும் மக்களுக்கு கிடைப்பதில்லை. ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நியாய விலை கடைக்கு செல்ல வேண்டிய அரிசியை கேரளாவுக்கு கடந்துகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடத்தல்காரர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல உள்ளனர்.
பெட்ரோல் பங்கில் பெட்ரோல் டீசல் கிடைப்பதில்லை. அதுவும் வெளி சந்தையில் விற்கப்படுகிறது. இந்த கேவலமான ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்” என்றார்.