மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வருவாய் இழப்பு நடைபெற்றது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக மாமன்ற கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
இதனையடுத்து செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “மதுரையில் உள்ள 100 மாநகராட்சி வார்டுகளில் மொத்தம் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் கட்டடங்கள் இருக்கிறது. வணிக கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள், தியேட்டர் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் உள்ளன. இதற்கு மாநகராட்சி ஏபிசி என 3 கேட்டகிரியில் வரி விதிக்கிறது. ஆண்டுக்கு மாநகராட்சிக்கு அரசுத் துறை இல்லாமல் ரூ.275 கோடிக்கு மேல் வருவாய் வருகிறது.
வணிக கட்டடங்களுக்கு அதற்கு உண்டான வரியை விதிக்காமல் குடியிருப்பு வரியை விதிக்கிறார்கள். இது மாநகராட்சி நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அதிமுக கவுன்சிலர்கள் முறையிட்டபோது , நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் கூறியிருக்கிறார்.
ரூ.150 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் திமுகவினர் அதிகம். 8 பேர் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி வருவாய் இழப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுக்கிறது. உயர் அதிகாரிகளின் பாஸ்வேர்டு எப்படி திருடப்படும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஆணையாளர், உதவி ஆணையாளர், பில் கலெக்டர், வருவாய் உதவி ஆணையாளர் ஆகியோரின் பாஸ்வேர்ட் திருடப்பட்டு இருக்கிறது. மதுரை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் பெண்களாக இருப்பதால் அவர்களது கணவர்கள் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்.
சாதாரண மக்கள் வீடு கட்ட முயற்சி செய்தால் அதிகாரிகள் கவுன்சிலர்களோடு இணைந்து மக்களை மிரட்டி, லஞ்சம் கேட்கிறார்கள். வரிவிதிப்பு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு ஆளுங்கட்சி நிர்வாகிகள் உதவி செய்கிறார்கள்.
நாங்கள் பூனை எலியை கவ்வுகிறது போல கவ்வுகிறோம், ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி நானும் ரவுடிதான் என்று சொல்வது போல பெட்டிசன் கொடுக்கிறார்கள்.” என்றார்.
ரூ.200 கோடி உங்கள் பண்ணை வீட்டில் திருடு போய்விட்டதே என்ற கேள்விக்கு? “என்னை வைத்து ஓட்டுவது அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள். மாநகராட்சியில் நடந்த ஊழல்தான் முக்கியம், மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. இதை வெளிக்கொண்டு வருவதற்கு விளக்கம் கேட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “மதுரையில் உள்ள 100 மாநகராட்சி வார்டுகளில் மொத்தம் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் கட்டடங்கள் இருக்கிறது. வணிக கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள், தியேட்டர் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் உள்ளன. இதற்கு மாநகராட்சி ஏபிசி என 3 கேட்டகிரியில் வரி விதிக்கிறது. ஆண்டுக்கு மாநகராட்சிக்கு அரசுத் துறை இல்லாமல் ரூ.275 கோடிக்கு மேல் வருவாய் வருகிறது.
வணிக கட்டடங்களுக்கு அதற்கு உண்டான வரியை விதிக்காமல் குடியிருப்பு வரியை விதிக்கிறார்கள். இது மாநகராட்சி நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அதிமுக கவுன்சிலர்கள் முறையிட்டபோது , நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் கூறியிருக்கிறார்.
ரூ.150 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் திமுகவினர் அதிகம். 8 பேர் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி வருவாய் இழப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுக்கிறது. உயர் அதிகாரிகளின் பாஸ்வேர்டு எப்படி திருடப்படும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஆணையாளர், உதவி ஆணையாளர், பில் கலெக்டர், வருவாய் உதவி ஆணையாளர் ஆகியோரின் பாஸ்வேர்ட் திருடப்பட்டு இருக்கிறது. மதுரை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் பெண்களாக இருப்பதால் அவர்களது கணவர்கள் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்.
சாதாரண மக்கள் வீடு கட்ட முயற்சி செய்தால் அதிகாரிகள் கவுன்சிலர்களோடு இணைந்து மக்களை மிரட்டி, லஞ்சம் கேட்கிறார்கள். வரிவிதிப்பு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு ஆளுங்கட்சி நிர்வாகிகள் உதவி செய்கிறார்கள்.
நாங்கள் பூனை எலியை கவ்வுகிறது போல கவ்வுகிறோம், ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி நானும் ரவுடிதான் என்று சொல்வது போல பெட்டிசன் கொடுக்கிறார்கள்.” என்றார்.
ரூ.200 கோடி உங்கள் பண்ணை வீட்டில் திருடு போய்விட்டதே என்ற கேள்விக்கு? “என்னை வைத்து ஓட்டுவது அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள். மாநகராட்சியில் நடந்த ஊழல்தான் முக்கியம், மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. இதை வெளிக்கொண்டு வருவதற்கு விளக்கம் கேட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.