மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால், அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டம் முதல் தற்காலிக நீக்கம் வரை
மதிமுகவில் முதன்மை செயலர் துரை - துணை பொதுச்செயலர் மல்லை சத்யா இடையே கருத்து மோதல் வெடித்தது. மேலும், சத்யா தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார். இதற்குப் பதிலளித்த மல்லை சத்யா, "துரோகி என அழைப்பதற்குப் பதிலாக விஷம் கொடுத்திருக்கலாம், அதை குடித்துவிட்டு இறந்திருப்பேன்" எனக் கூறியிருந்தார். தொடர்ந்து, வைகோ ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னையில் அவருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார்.
இதையடுத்து, கட்சி கட்டுப்பாட்டை மீறியது, கண்ணியத்தை சீர்குலைத்தது மற்றும் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, மல்லை சத்யாவை கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் வைகோ தற்காலிகமாக நீக்கினார். மேலும், 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்தால், ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
நிரந்தர நீக்கம்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வைகோவுக்கு மல்லை சத்யா ஒரு கடிதம் எழுதினார். அதில், "32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி, சக்கையாகத் தூக்கி எறியத் துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்குவார்கள்" என்று கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி வைகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கட்சிக்கு விரோதமான செயல்களில் மல்லை சத்யா ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் அவரை நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டம் முதல் தற்காலிக நீக்கம் வரை
மதிமுகவில் முதன்மை செயலர் துரை - துணை பொதுச்செயலர் மல்லை சத்யா இடையே கருத்து மோதல் வெடித்தது. மேலும், சத்யா தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார். இதற்குப் பதிலளித்த மல்லை சத்யா, "துரோகி என அழைப்பதற்குப் பதிலாக விஷம் கொடுத்திருக்கலாம், அதை குடித்துவிட்டு இறந்திருப்பேன்" எனக் கூறியிருந்தார். தொடர்ந்து, வைகோ ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னையில் அவருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார்.
இதையடுத்து, கட்சி கட்டுப்பாட்டை மீறியது, கண்ணியத்தை சீர்குலைத்தது மற்றும் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, மல்லை சத்யாவை கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் வைகோ தற்காலிகமாக நீக்கினார். மேலும், 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்தால், ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
நிரந்தர நீக்கம்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வைகோவுக்கு மல்லை சத்யா ஒரு கடிதம் எழுதினார். அதில், "32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி, சக்கையாகத் தூக்கி எறியத் துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்குவார்கள்" என்று கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி வைகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கட்சிக்கு விரோதமான செயல்களில் மல்லை சத்யா ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் அவரை நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.