இந்தியா

அன்போடு அழைத்த சிறுவர்கள்...தட்டிக்கழிக்காமல் வந்த எம்.எல்.ஏ

சிறுவர் சிறுமியர் துவங்கிய மிட்டாய் கடையை எம்எல்ஏ துவங்கி வைத்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அன்போடு அழைத்த சிறுவர்கள்...தட்டிக்கழிக்காமல் வந்த எம்.எல்.ஏ
சிறுவர்களின் மிட்டாய் கடையை திறந்து வைத்த எம்.எல்.ஏ
மிட்டாய் கடை துவங்கிய சிறுவர்கள்

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்லுருட்டி பகுதியைச் சேர்ந்த நஹாஸ் செரீன் தம்பதிகளில் மகன்களான முகமது சியான், முகமது சமீல் நண்பர்களான அனந்து கிருஷ்ணன், அகமது ஷாதில் ஆகிய நான்கு பேரும் இணைந்து கோடை விடுமுறை பயனுள்ளதாக இருக்க வேண்டும் என விரும்பி தங்கள் வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் விளையாடும் குழந்தைகளுக்காக சிறிய அளவில் மிட்டாய் கடை ஒன்றை துவங்கி உள்ளனர்.

இதன் துவக்க விழாவிற்காக கோழிக்கோடு திருவம்பாடி எம்.எல்.ஏ-வான லிண்டோ ஜோசப்பை மிட்டாய் கடையை திறந்து வைக்க அழைத்துள்ளனர். குழந்தைகளில் வேண்டுகோளை ஏற்று எம்.எல்.ஏ லிண்டோ ஜோசப் கடையை திறந்து வைத்தார்.

திறந்து வைத்த எம்.எல்.ஏ

கடையை திறந்து வைத்த எம்.எல்.ஏ-வுக்கு சிறுவர், சிறுமிகள் தேன் மிட்டாயை பரிசாக வழங்கினர். கடையை திறந்து வைத்த எம்.எல்.ஏ தனது சமூகவலைதளத்தில் கல்லூரியில் லுலுமால் திறக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார்.