K U M U D A M   N E W S

பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜாமின்... காவல்துறை மனுவிற்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சேலம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி, காவல் துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, துணைவேந்தர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக சட்டமன்றக்குழு தலைவர் திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!

தமிழக பா.ஜ.க புதிய தலைவருக்கான போட்டியில், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் நேற்று இரவு திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

மனோஜ் பாண்டியன் வைத்த கோரிக்கை – முதலமைச்சர் சொன்ன பதில்

உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என இந்த பேரவையில் தெரிவித்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் பதில் அளித்தார்.

ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் விடுவிக்கக்கூடாது - தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அன்னை இல்லம் தொடர்பான வழக்கு.. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SRH-ஐ 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி GT அபார வெற்றி!

ஐதரபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு.. ஆதாரம் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்க மனுத்தாக்கல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதாக தெரிவித்து, வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு சம்பந்தம் இல்லை - டி.ஆர். பாலு எம்.பி. பேச்சு

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகா புத்திசாலி அவரது பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு இல்லை, நாங்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்