செந்தில் பாலாஜி ஜாமின்: பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு... வானதி சீனிவாசன் தாக்கு!

செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரை பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Sep 26, 2024 - 18:04
 0
செந்தில் பாலாஜி ஜாமின்: பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு... வானதி சீனிவாசன் தாக்கு!
செந்தில் பாலாஜி ஜாமின்: பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு... வானதி சீனிவாசன் தாக்கு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி(Senthil Balaji), கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி (Senthi Balaji) போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது நான்கு வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 

உயர்நீதிமன்றத்தில் பல முறை அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இன்று அவரு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. இதனை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது! எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரை பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியதே திமுகதான் ஆனால், அவர் திமுகவில் இணைந்ததும் புனிதராகி விட்டார். செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது கரூரில் பேசிய இன்றைய முதலமைச்சர் முக ஸ்டாலின், 15 முறை அமைச்சரவை மாற்றப்பட்டபோதும், சீனியர் அமைச்சர்களே மாற்றப்பட்டபோதும், ஜூனியர் அமைச்சரான செந்தில் பாலாஜி மட்டும் மாற்றப்படவில்லை. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர். ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது யார் முதலமைச்சர் என்ற பட்டியலில் செந்தில் பாலாஜி பெயரும் இருந்தது. இவர் கெட்டகேடு, இதுதான் வேடிக்கை. செந்தில பாலாஜியின் தம்பி, கரூர் மாவட்டத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். கொள்ளை, ஊழல், லஞ்சம் வாங்குவதில் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆள்கடத்தல், நிலஅபகரிப்பு புகார்கள் நீதிமன்றத்தில் உள்ளன' என பேசியிருந்தார்.

ஆனால் இப்போது, எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருசு வகுக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது உறுதி அதனினும் பெரிது" என வரவேற்றிருக்கிறார்.

மேலும் படிக்க: டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்... தமிழக நிதி குறித்து பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

முரண்பாடுகளின் மொத்த உருவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் அவரே நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஊழல் குற்றவாளியை, அரசு வேலை வாங்கித் தரவதாக லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்ட ஒருவரை கொண்டாடுவதற்கு வெட்கப்பட வேண்டும். உச்ச நீடுமன்றம் பல்வேறு நிபந்தனைகள் விதித்திருப்பதால் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow