K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம்..!

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம் செய்தார். அப்போது சேவாக் உடன் செல்ஃபி எடுத்து ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

திருவள்ளுவரின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி.. அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் விழா மேடையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

எதேச்சதிகாரத்தை வெல்வோம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

“திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உட்கட்சி விவகாரங்களை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை - பாமக தலைவர் அன்புமணி

கட்சியின் பொதுக்குழுவின் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜமே. கட்சியின் உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் தலைதூக்கிய சாதி பிரச்சனை.. மெளனம் காக்கும் பள்ளிக் கல்வித்துறை?

மாணவனை ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைதி காத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. சிறப்பு விசாரணை குழுவிடம் ஆவணம் ஒப்படைப்பு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.. எல்.முருகன்

பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராட்டங்களை நடத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

தகைசால் தமிழர் விருது வழங்கியது எனக்கு கிடைத்த பெருமை.. நல்லகண்ணுவிற்கு ஸ்டாலின் புகழாரம்

நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே தனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'யார் அந்த சார்'.. சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ‘யார் அந்த சார்’ என அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பயப்படக்கூடிய கட்சியா..? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

திமுக பயப்படுகிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த கருத்திற்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.

ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது.. அமைச்சர் சேகர் பாபு 

மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் நினைவு தினம்... காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மலர்த்தூவி மரியாதை..!

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து மோதல் ..!

பாமக இளைஞர் சங்கத் தலைவர் நியமனத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை.. போலீசார் விசாரணை..!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் நினைவு தினம்... மாசற்ற மனதுக்கும், தூய அன்புக்கும் சொந்தக்காரர் - மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி தகனம்..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் யமுனை நதிக்கரையில் குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்கு நடைபெற்றது.

48வது சென்னை புத்தகக் காட்சி இன்று தொடக்கம்..!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 48வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மயிலாப்பூரில் இரும்பு சாரம் உடைந்து ஒருவர் காயம்.. 3 கார்கள் சேதம்..!

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வரக்கூடிய இடத்தில் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், 3 கார்கள் சேதமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி  ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு..! 

சென்னை ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி  ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா.. சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சேவாக்..!

ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின்' இறுதி போட்டிகளில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் கலந்து கொள்கிறார். 

ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முற்றுகை போராட்டம்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருகிறது.. கோவி.செழியன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அற்புதமான மனிதர்.. நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை.. தாமாக முன் வந்து விசாரிக்கும் நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.