K U M U D A M   N E W S

தமிழ்நாடு

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரபரப்பு.. கொளுத்தும் வெயிலில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்!

கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த ஆந்திர மாநில பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தொடர் மழை காரணமாக நெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

காதலால் வந்த வினை.. சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய கும்பல்

அரும்பாக்கம் பகுதியல் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கைதாகியுள்ள நபர்களிடமிருந்து ரூ.29,000/- ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பதற்றம் வேண்டாம்.. முககவசம் கட்டாயமில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை, தற்போது பரவி வரும் கொரோனாவால் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

குன்றக்குடி KVK சார்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம்- திரளான விவசாயிகள் பங்கேற்பு

"வளமான விவசாயி நாட்டின் பெருமை" தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் மூலமாக ஓ.சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது.

சோசியல் மீடியாவில் லாக் போடாத பெண்கள் தான் டார்கெட்- வசமாக சிக்கிய நபர்

பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.

மதுரைக்கு வந்த சோதனை.. பெட்ரோல் நிறத்தில் வரும் நிலத்தடி நீர்

மதுரையில் தெப்பக்குளம் பகுதி அருகே போர்வெல்களில் இருந்து பெட்ரோல் நிறத்தில் ரசாயனம் கலந்து வரும் நீரினால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். கட்டிடப் பணிகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் நீரின் நிலை உள்ளதாக ஆய்வக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

என் அப்பாவின் கடைசி ஆசை இது.. எவரெஸ்டில் ஏறிய சிறுவன் ஆசிஷ் உருக்கம்..!

என் அப்பாவின் கடைசி ஆசை நிறைவேற்றுவதற்காக எவரெஸ்டில் ஏறிய சிறுவன் ஆசிஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கோலடி திட்டத்தை மாற்றம் செய்ய முதலமைச்சரால் மட்டுமே முடியும் - திருமாவளவன்

திருவேற்காடு கோளடி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் திட்டத்தை மாற்றம் செய்வதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து இடமாற்றம் செய்யப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் புதிய விதிகள்.. முழுமையாக நிறுத்தி வைக்க சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!

நகைக் கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் வெளியிட்டி புதிய விதிகளின் அறிவிப்பை, முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என மதுரையில் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.