K U M U D A M   N E W S
Kumudam Ad

விளையாட்டு

இங்கிலாந்தில் ஃபிட்னஸ் டெஸ்ட் எடுத்த விராட் கோலி.. மீண்டும் சர்ச்சையில் பிசிசிஐ!

இந்திய வீரர்கள் அனைவரும் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கும் நிலையில், லண்டனில் இருந்தபடியே உடற்தகுதியை உறுதிப்படுத்திய விராட் கோலி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை 2025.. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி பரிசுத்தொகை - ஐசிசி அறிவிப்பு!

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி என கடந்த உலகக் கோப்பையை விட 4 மடங்கு அதிகமாகப் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு: காரணம் என்ன?

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

‘RCB CARES’ - கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் புதிய நிவாரணத் திட்டம்!

சின்னசாமி மைதானத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 ரசிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி மூன்று மாத மௌனத்திற்குப் பிறகு, "RCB கேர்ஸ்" என்ற புதிய நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

ஆன்லைன் கேமிங் மசோதா: ட்ரீம் 11 எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் பிசிசிஐ!

பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ட்ரீம் 11 முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Cheteshwar Pujara: டெஸ்ட் போட்டிக்காகவே செதுக்கிய சிலை.. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு!

இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுத்தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

டிரெஸ்ஸிங் ரூமில் சேவாக்- சேப்பல் இடையே நிகழ்ந்த பிரச்னை.. கூல் செய்த டிராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக், இந்திய டிரஸ்ஸிங் ரூமில் பயிற்சியாளர் க்ரேக் சேப்பலுடன் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா டி20 லீக் ஏலம்: பெயரை ரிஜிஸ்டர் செய்த 13 இந்திய வீரர்கள்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 டி20 லீக்கின் நான்காவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க, பியூஷ் சாவ்லா, சித்தார்த் கவுல் மற்றும் அங்கித் ராஜ்பூட் உட்பட 13 இந்திய வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

ரஹானே எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் மும்பை கிரிக்கெட் ரசிகர்கள்!

மூத்த கிரிக்கெட் வீரரான அஜிங்க்யா ரஹானே, மும்பை ரஞ்சி டிராபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். இருப்பினும் ஒரு வீரராக தொடர்ந்து மும்பை அணிக்காக விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.