உலகம்

இஸ்ரேல் - ஈரான் இடையே 7 வது நாளாக தொடரும் மோதல்.. இரு நாடுகளிலும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இஸ்ரேல் - ஈரான் இடையே 7 ஆவது நாளாக தொடரும் மோதலால் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 585 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 326 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் - ஈரான் இடையே 7 வது நாளாக தொடரும் மோதல்.. இரு நாடுகளிலும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
இஸ்ரேல் - ஈரான் இடையே 7 வது நாளாக தொடரும் மோதல்.. இரு நாடுகளிலும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் இன்றுவரை தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபுறம், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருவதோடு, பலமுறை இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆயுதங்களை சப்ளை செய்வதை ஈரான் நிறுத்தியப்பாடில்லை.

எந்த நாட்டிற்கும் எந்த நாடு வேண்டுமானாலும் ஆயுதங்கள் சப்ளை செய்யலாம், ஆனால் அவை நேரடியாக போர் களத்தில் குதித்தால் மட்டுமே அது மோதலாக மாறும். அந்தவகையில், ஹமாஸூக்கு ஆதரவாக இருந்த ஒரே காரணத்திற்காக ஈரானை சீண்டிவிட்டது.

ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான மோதல் கடந்த 13ம் தேதி தொடங்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று 7 வது நாளாக மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரானை நிபந்தனையின்றி சரணடையுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை என்று கூறி, ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ஆயுதப்படைத் தலைமைத் தளபதி முகமது பகேரி மற்றும் மூத்த புரட்சிகர காவல்படை தளபதி கோலம் அலி ரஷீத், அணு விஞ்ஞானிகள் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி மற்றும் ஃபெரேடவுன் அப்பாசி ஆகியோர் கொல்லப்பட்டனர். அதேபோல் ஈரானின் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலைப் பழிவாங்குவதாக சபதம் எடுத்துள்ள ஈரான், இஸ்ரேலை அமெரிக்காத்தான் இயக்குகிறது என்றும், குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக, 'ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு' என்ற பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து அறிந்துக் கொண்ட இஸ்ரேல் ஈரான் மீது தொடர் தாக்குதலை நடத்த தொடங்கியது. கடந்த ஜூன் 12 ஆம் தேதியனறு ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது ”ஆபரேஷன் ரைசிங் லயன்” என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.

இஸ்ரேலில் உள்ள டெல்அவிவ் நகரில் 400 ஏவுகணைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட டிரோன்களைக் கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுவரையில் நடந்த தாக்குதல்களில் ஈரானில் 585 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 326 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோல, இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 300 பேர் படுகாயமடைந்துள்ளனர்.