உலகம்

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி மரியாதை!

அரசுமுறைப் பயணமாக ஆப்ரிக்க நாடான கானாவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, வரலாற்றுச் சுற்றுப்பயணத்தின் நினைவாக கானா அரசு அவருக்கு நாட்டின் உயரிய தேசிய விருதான “Order of the Star of Ghana” விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி மரியாதை!
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி மரியாதை!
பிரிக்ஸ் மாநாட்​டில் பங்​கேற்க பிரேசில் செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டினா மற்​றும் நமீபியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அந்தவகையில் முதல் நாடாக நேற்று மாலை கானா நாட்டின் தலைநகரான அக்ராவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் ஜான் மஹாமா, விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து கானா நாட்டின் பாரமப்ரிய கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கானா நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து அதிபர் மாளிகைக்குச் சென்ற இரு தலைவர்களும், இந்தியா - கானா இடையேயான பொருளாதாரம், பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து கானா நாட்டின் உயரிய விருதான The Officer of the Order of the Star of Ghana என்ற விருதை பிரதமர் மோடிக்கு கானா அதிபர் ஜான் மஹாமா வழங்கினார்.

இந்த விருது, கானா நாட்டுடன் இந்தியா வைத்துள்ள நட்பு உறவுகளை வலுப்படுத்தியதற்கும், வணிகம், அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இருநாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவை வளர்த்ததற்கும் பிரதமர் மோடியின் பங்கை பாராட்டும் வகையில் வழங்கப்பட்டது.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் கானா ஜனாதிபதி நானா அகூஃபோ-அட்டோ, பிரதமர் மோடியின் சாதனைகளை புகழ்ந்து பேசினார். பிரதமர் மோடி தனது நன்றி உரையில், "இந்த விருது எனது ஒருவருக்கானது அல்ல, இந்திய மக்கள் அனைவருக்குமான மரியாதை," என்று தெரிவித்தார். மேலும், சர்வதேச நாடுகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 29-வது உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வு, இந்தியா–ஆப்ரிக்க உறவுகளை மேலும் பலப்படுத்தும் முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
மேலும் பிரதமர் மோடி, கானாவில் உள்ள இந்திய மக்களை சந்தித்து உரையாற்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.