அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளியரான சோக்ரன் மம்தாணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தி, தற்போதைய அரசியல் சூழலில் பெரிய எதிரொலியைக் கிளப்பியுள்ளது.
நியூயாா்க் நகர மேயா் தோ்தல் நவம்பா் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உள்கட்சித் தேர்தலில், பிரபல பாலிவுட் இயக்குநர் மீரா நாயரின் மகனும் இந்திய வம்சாவளியுமான சோக்ரன் மம்தாணி வெற்றி பெற்றார்.
சோக்ரன் மம்தாணி பிரபல பாலிவுட் இயக்குநர் மீரா நாயரின் மகனாவார். இளம் வயதிலேயே சமூக நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த சில ஆண்டுகளில் நியூயார்க் நகரின் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் மக்களின் வாழ்வாதார சிக்கல்களை முன்வைத்து வலியுறுத்தி வந்துள்ளார். இவர், பெருநிறுவனங்களுக்கு அதிக வரி விதிப்பது, குடியிருப்பு வாடகை உயர்வை கட்டுப்படுத்துவது, பொது போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவது போன்ற வளர்ச்சி நெறிகளுடன் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சோக்ரன் மம்தாணியின் மேயர் வேட்புமீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ளார். தனது இணையதள உரை ஒன்றில், “ஜனநாயகக் கட்சி மனநலத்தில் பாதிக்கப்பட்டவர்களால் வழிநடத்தப்படுகிறது. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஜனநாயக கட்சியினர் எல்லை தாண்டி விட்டதாகவும் 100 சதவீதம் கம்யூனிஸ்ட் வெறி கொண்ட சோக்ரனை வேட்பாளராக தேர்ந்தெடுத்ததாகவும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
சோக்ரன் ஒன்றும் அவ்வளவு பெரிய புத்திசாலி இல்லை எனவும் நமது வரலாற்றில் கருப்புப் புள்ளியாக அமைய வாய்ப்பு உள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். பெருநிறுவனங்களுக்கான வரி உயர்வு, குடியிருப்புகளுக்கான வாடகை உயர்வு முடக்கம் என சோக்ரன் பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் இந்த கருத்துகள், மீண்டும் அவரது தீவிரமான பேச்சு காட்டுவதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேவேளையில், சோக்ரன் மம்தாணியின் ஆதரவாளர்கள், இத்தகைய விமர்சனங்கள் அவரை மேலும் வலுவாக்கும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த தேர்தல், நியூயார்க் நகரத்தின் எதிர்காலக் கோவையை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தருணமாக அமைவுள்ளதாகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மேயர் பதவிக்குப் போட்டியிடுவது பெருமைக்குரிய நிகழ்வாகவும் வர்ணிக்கப்படுகிறது.
நியூயாா்க் நகர மேயா் தோ்தல் நவம்பா் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உள்கட்சித் தேர்தலில், பிரபல பாலிவுட் இயக்குநர் மீரா நாயரின் மகனும் இந்திய வம்சாவளியுமான சோக்ரன் மம்தாணி வெற்றி பெற்றார்.
சோக்ரன் மம்தாணி பிரபல பாலிவுட் இயக்குநர் மீரா நாயரின் மகனாவார். இளம் வயதிலேயே சமூக நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த சில ஆண்டுகளில் நியூயார்க் நகரின் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் மக்களின் வாழ்வாதார சிக்கல்களை முன்வைத்து வலியுறுத்தி வந்துள்ளார். இவர், பெருநிறுவனங்களுக்கு அதிக வரி விதிப்பது, குடியிருப்பு வாடகை உயர்வை கட்டுப்படுத்துவது, பொது போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவது போன்ற வளர்ச்சி நெறிகளுடன் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சோக்ரன் மம்தாணியின் மேயர் வேட்புமீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ளார். தனது இணையதள உரை ஒன்றில், “ஜனநாயகக் கட்சி மனநலத்தில் பாதிக்கப்பட்டவர்களால் வழிநடத்தப்படுகிறது. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஜனநாயக கட்சியினர் எல்லை தாண்டி விட்டதாகவும் 100 சதவீதம் கம்யூனிஸ்ட் வெறி கொண்ட சோக்ரனை வேட்பாளராக தேர்ந்தெடுத்ததாகவும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
சோக்ரன் ஒன்றும் அவ்வளவு பெரிய புத்திசாலி இல்லை எனவும் நமது வரலாற்றில் கருப்புப் புள்ளியாக அமைய வாய்ப்பு உள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். பெருநிறுவனங்களுக்கான வரி உயர்வு, குடியிருப்புகளுக்கான வாடகை உயர்வு முடக்கம் என சோக்ரன் பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் இந்த கருத்துகள், மீண்டும் அவரது தீவிரமான பேச்சு காட்டுவதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேவேளையில், சோக்ரன் மம்தாணியின் ஆதரவாளர்கள், இத்தகைய விமர்சனங்கள் அவரை மேலும் வலுவாக்கும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த தேர்தல், நியூயார்க் நகரத்தின் எதிர்காலக் கோவையை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தருணமாக அமைவுள்ளதாகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மேயர் பதவிக்குப் போட்டியிடுவது பெருமைக்குரிய நிகழ்வாகவும் வர்ணிக்கப்படுகிறது.