மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயம் இன்று அறிவித்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வழக்கின் பின்னணி
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்தவுடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உள்ளிட்ட பல வழக்குகள் பதியப்பட்டன.
குற்றவாளி என அறிவிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகப் போராடுவோரைச் சுட்டுக் கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் காவல்துறை ஐ.ஜி. ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகப் புதிய வழக்கை அத்தீர்ப்பாயம் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி எனத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
சர்வதேச குற்றத் தீர்ப்பாயயத்தின் கருத்து
இதுகுறித்து சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயம் கூறியதாவது, "ஷேக் ஹசீனா மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளார். அவரது ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது. ஷேக் ஹசீனா அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். அவர், போராட்டக்காரர்களைக் கொல்ல ஹெலிகாப்டர் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டு இருக்கிறார்.
போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. போராட்டக்காரர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 24 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். ஷேக் ஹசீனா போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டதுடன், அவர்களைக் களங்கப்படுத்தவும் செய்தார்.
இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவருக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வழக்கின் பின்னணி
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசு அமைந்தவுடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் உள்ளிட்ட பல வழக்குகள் பதியப்பட்டன.
குற்றவாளி என அறிவிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகப் போராடுவோரைச் சுட்டுக் கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் காவல்துறை ஐ.ஜி. ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகப் புதிய வழக்கை அத்தீர்ப்பாயம் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி எனத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
சர்வதேச குற்றத் தீர்ப்பாயயத்தின் கருத்து
இதுகுறித்து சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயம் கூறியதாவது, "ஷேக் ஹசீனா மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளார். அவரது ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது. ஷேக் ஹசீனா அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். அவர், போராட்டக்காரர்களைக் கொல்ல ஹெலிகாப்டர் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டு இருக்கிறார்.
போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. போராட்டக்காரர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 24 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். ஷேக் ஹசீனா போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டதுடன், அவர்களைக் களங்கப்படுத்தவும் செய்தார்.
இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவருக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
LIVE 24 X 7









