தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சிகுடா - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நேற்று நள்ளிரவு கச்சிக்குடாவில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று மாலை 4:30 மணியளவில் மதுரை ரயில் நிலையம் வந்து அடைந்தது.
இதனைத்தொடர்ந்து, மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்ட ரயில் எல்லிஸ் நகர் ரயில்வே பாலம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற பெண் ஒருவர் ரயில் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தண்டவாளத்திலே நின்றதால் அவர் மீது ரயில் மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். ரயிலில் உள்ளவர்கள் அனைவரும் கூச்சலிட ரயில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக அந்த பெண் மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து ரயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் விபத்துக்குள்ளான பெண் கேரளாவைச் சேர்ந்த ராணி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைதொடர்ந்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் மீது ரயில் மோதியதால் 20 நிமிடம் தாமதமாக கச்சிகுடா ரயில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.
இதனைத்தொடர்ந்து, மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்ட ரயில் எல்லிஸ் நகர் ரயில்வே பாலம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற பெண் ஒருவர் ரயில் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தண்டவாளத்திலே நின்றதால் அவர் மீது ரயில் மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். ரயிலில் உள்ளவர்கள் அனைவரும் கூச்சலிட ரயில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக அந்த பெண் மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து ரயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் விபத்துக்குள்ளான பெண் கேரளாவைச் சேர்ந்த ராணி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைதொடர்ந்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் மீது ரயில் மோதியதால் 20 நிமிடம் தாமதமாக கச்சிகுடா ரயில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.