மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு டெல்லி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அவரை வழி அனுப்பி வைப்பதற்காக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றி
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், “ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. மூன்று கிலோமீட்டர் வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று நாம் மிகப் பெரிய தாக்குதலை நடத்தி இருக்கிறோம். தீவிரவாத எதிராக தக்க பாடத்தை புகட்டி உள்ளோம். அதேதான் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அவருடைய வழிகாட்டுதல் என்றும் நமக்கு இருக்கும்.
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கிவிட்டது. மதுரையில் 22ம் தேதி மிகப்பெரிய முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கான வாழ்த்துகளையும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநாட்டின் நோக்கத்தையும் அவர் கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வணங்கிக்கொண்டிருக்கிற ஒரு பகுதி திருப்பரங்குன்றம். அங்கு நாம் கூட வெற்றிவேல் யாத்திரை நடத்தினோம்.
ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புவார்கள்
திருப்பரங்குன்றம் மலையை மீட்க வேண்டும், மீண்டும் அங்கு பூஜைகள் நடத்தி விளக்கேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தான் இந்த முருக பக்தர் மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு மத்திய அமைச்சர்கள் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் வருகை தர இருக்கின்றனர். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எப்படி தூக்கி வீசிவிட்டு அங்கு ஆட்சி அமைத்தோம். அதேபோல 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும்.
எப்படி அரவிந்த் கெஜ்ரிவாலை அங்கு மக்கள் வீட்டிற்கு ஆட்சியை விட்டு துரத்தினார்களோ, அதேபோல ஸ்டாலினையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். அண்ணாமலை எப்பொழுதுமே வழிகாட்டியாக தலைவராக இருக்கிறார். அவர் என் மண், என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி உள்ளிட்டவை மூலம் பல்வேறு மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளார். அதன் வெளிப்பாடு தான் தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கும், கட்சிக்கும் வலு சேர்க்கும்.
தலைவர்களை போற்ற வேண்டும்
NDA கூட்டணியில் விஜய் என்ற கேள்விக்கு, உடனடியாக நன்றி கூறிவிட்டு எல்.முருகன் காரில் ஏறினார். முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதற்காக அமித்ஷா முத்துராமலிங்க தேவர் பற்றி பேசினாரா என்ற கேள்விக்கு, நமது தேசிய தலைவர்களை நினைவு கூறுவது வழக்கமான ஒன்று. அதை சுட்டிக்காட்டி தான் இந்த மண்ணில் மதுரை மண்ணுக்குரிய முத்துராமலிங்க தேவரை நினைவு கூர்ந்து இருக்கிறார்.
நாம் அரசியலுக்காக அதை பண்ணவில்லை. நம்முடைய தலைவர்களை போற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் உணர்வு பூர்வமான ஒன்று. அதன் வெளிப்பாடுதான் அமித்ஷா பேசியது. அந்தந்த மண் சார்ந்த தலைவர்களை போற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம் என்றார்.
ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றி
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், “ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. மூன்று கிலோமீட்டர் வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று நாம் மிகப் பெரிய தாக்குதலை நடத்தி இருக்கிறோம். தீவிரவாத எதிராக தக்க பாடத்தை புகட்டி உள்ளோம். அதேதான் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அவருடைய வழிகாட்டுதல் என்றும் நமக்கு இருக்கும்.
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கிவிட்டது. மதுரையில் 22ம் தேதி மிகப்பெரிய முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கான வாழ்த்துகளையும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநாட்டின் நோக்கத்தையும் அவர் கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வணங்கிக்கொண்டிருக்கிற ஒரு பகுதி திருப்பரங்குன்றம். அங்கு நாம் கூட வெற்றிவேல் யாத்திரை நடத்தினோம்.
ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புவார்கள்
திருப்பரங்குன்றம் மலையை மீட்க வேண்டும், மீண்டும் அங்கு பூஜைகள் நடத்தி விளக்கேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தான் இந்த முருக பக்தர் மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு மத்திய அமைச்சர்கள் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் வருகை தர இருக்கின்றனர். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எப்படி தூக்கி வீசிவிட்டு அங்கு ஆட்சி அமைத்தோம். அதேபோல 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும்.
எப்படி அரவிந்த் கெஜ்ரிவாலை அங்கு மக்கள் வீட்டிற்கு ஆட்சியை விட்டு துரத்தினார்களோ, அதேபோல ஸ்டாலினையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். அண்ணாமலை எப்பொழுதுமே வழிகாட்டியாக தலைவராக இருக்கிறார். அவர் என் மண், என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி உள்ளிட்டவை மூலம் பல்வேறு மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளார். அதன் வெளிப்பாடு தான் தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கும், கட்சிக்கும் வலு சேர்க்கும்.
தலைவர்களை போற்ற வேண்டும்
NDA கூட்டணியில் விஜய் என்ற கேள்விக்கு, உடனடியாக நன்றி கூறிவிட்டு எல்.முருகன் காரில் ஏறினார். முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதற்காக அமித்ஷா முத்துராமலிங்க தேவர் பற்றி பேசினாரா என்ற கேள்விக்கு, நமது தேசிய தலைவர்களை நினைவு கூறுவது வழக்கமான ஒன்று. அதை சுட்டிக்காட்டி தான் இந்த மண்ணில் மதுரை மண்ணுக்குரிய முத்துராமலிங்க தேவரை நினைவு கூர்ந்து இருக்கிறார்.
நாம் அரசியலுக்காக அதை பண்ணவில்லை. நம்முடைய தலைவர்களை போற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் உணர்வு பூர்வமான ஒன்று. அதன் வெளிப்பாடுதான் அமித்ஷா பேசியது. அந்தந்த மண் சார்ந்த தலைவர்களை போற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம் என்றார்.