காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பரந்தூர் விமான நிலையம்
இந்த பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் விலை நிலங்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படக்கூடிய ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 1000 நாட்களுக்கு மேலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று தமிழக அரசனாது விமான நிலைய திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு ஏக்கர் ரூபாய் 35 லட்சம் முதல் அதிகபட்சமாக 2 கோடியே 57 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது என அரசாணையை வெளியிட்டு இருந்தது.
அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிப்பு
இதை அறிந்த பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு எதிர்ப்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்ட வரக்கூடிய கிராம மக்களை ஒன்று சேர்த்து அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல கட்ட போராட்டங்களை இந்த விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தினாலும் கூட அதற்கு செவிசாய்க்காமல் அரசு திட்டத்தை அமல்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகையால் இத்திட்டத்தை கைவிடக் கோரி சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ளது.
இந்த சட்டப் போராட்டத்திற்கு முதல் கட்ட நடவடிக்கையாக வருகின்ற 2ம் தேதி அதாவது புதன்கிழமை என்று சென்னை சென்று இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவலை போராட்ட குழு தெரிவித்து இருக்கிறது.
பரந்தூர் விமான நிலையம்
இந்த பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் விலை நிலங்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படக்கூடிய ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 1000 நாட்களுக்கு மேலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று தமிழக அரசனாது விமான நிலைய திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு ஏக்கர் ரூபாய் 35 லட்சம் முதல் அதிகபட்சமாக 2 கோடியே 57 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது என அரசாணையை வெளியிட்டு இருந்தது.
அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிப்பு
இதை அறிந்த பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு எதிர்ப்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்ட வரக்கூடிய கிராம மக்களை ஒன்று சேர்த்து அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல கட்ட போராட்டங்களை இந்த விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தினாலும் கூட அதற்கு செவிசாய்க்காமல் அரசு திட்டத்தை அமல்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகையால் இத்திட்டத்தை கைவிடக் கோரி சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ளது.
இந்த சட்டப் போராட்டத்திற்கு முதல் கட்ட நடவடிக்கையாக வருகின்ற 2ம் தேதி அதாவது புதன்கிழமை என்று சென்னை சென்று இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவலை போராட்ட குழு தெரிவித்து இருக்கிறது.