தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூன் 12 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணைக்கு வந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார். அதோடு வரலாற்றில் முதல் நிகழ்வாக கல்லணையிலும் வந்து தண்ணீரை திறந்து விட்டார்.
தண்ணீர் திறப்பதில் தாமதம்:
ஆனால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களுக்கு இதுவரை காவிரி நீர் வந்து சேரவில்லை. அணைக்கரையில் இருந்து வடவாறு வழியாக வீராணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு - வீராணம் அணை ஏற்கனவே நிரம்பியுள்ளதால் வெள்ளாறு வழியாக கடலுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
ரூ.490 கோடி மதிப்பீட்டில் ஆதனூர் - குமாரமங்கலம் தடுப்பணை கட்டப்பட்டு பணிகள் முடிந்து மூன்று மாதம் ஆன பின்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இன்னும் நீர்வளத்துறை தாமதம் செய்து கொண்டிருக்கிறது.
அமைச்சருக்காக காத்திருக்கும் அதிகாரிகள்:
கர்நாடகாவிலிருந்து காவேரியில் ஒரு லட்சம் கனஅடி உபநீர் திறக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் மேட்டூர் அணையில் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு, கொள்ளிடம் வழியாக கடலுக்கு அனுப்பப்படுமே தவிர, விவசாய நிலங்களுக்கு அனுப்புவதற்காக நீரவளத்துறை பணிகளை செய்யாமல், அமைச்சருக்காக காத்திருந்து கொண்டிருப்பது சரியா ?
வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவர் வந்தவுடன் மட்டுமே அணைக்கரையில் இருந்து வடக்கு ராஜன் மற்றும் தெற்கு ராஜன் கால்வாய் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அமைச்சர் வருகைக்காக தண்ணீரை திறக்காமல் பாசனத்துக்கு தண்ணீர் விடாமல் கடலுக்கு தண்ணீரை திறந்து விட்டுள்ளது அதிகாரிகள் விவசாயிகளுக்கு செய்துள்ள மாபெரும் துரோகமாகும்.
கோரிக்கை நிறைவேற்றவில்லை:
கடலூர் மாவட்டத்தில் வடக்கு ராஜன் கால்வாய் பகுதி பாசனத்தில் தெளிப்பு மூலமாக நெல் வேளாண்மை செய்யப்படுவதால், விவசாய நிலங்களுக்கு ஈரப்பதம் ஏற்படாத வகையில் கால்நடைகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் திறந்து விட வேண்டுமென வைத்த கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு - சீர்காழி வட்டங்கள் காய்ந்து கிடக்கின்றன. ஆனால் மறுபுறம் பாசன நீர் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.
தண்ணீர் திறக்கும் வரை தொடர் காத்திருப்புப் போராட்டம்:
வேளாண்மை துறை அமைச்சர் இல்லாத பட்சத்தில் அதற்கு அடுத்த மக்கள் பிரதிநிதிகளை, அமைச்சர்களை வைத்து திறந்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீரை கொண்டு சேர்க்க வேண்டிய நீர் உள்ள ஆதாரத்துறை அமைச்சர் வருகைக்காக தண்ணீரை கடலுக்கு அனுப்பி வருவது மயிலாடுதுறை - கடலூர் மாவட்ட விவசாயிகள் கடுமையான வேதனை ஏற்படுத்தியுள்ளது. இதை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால் திருச்சியில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு தண்ணீர் திறக்கும் வரை தொடர் காத்திருப்புப் போராட்டம் தமிழர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடலூர் மயிலாடுதுறை மாவட்ட விவசாயி திரட்டி நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
தண்ணீர் திறப்பதில் தாமதம்:
ஆனால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களுக்கு இதுவரை காவிரி நீர் வந்து சேரவில்லை. அணைக்கரையில் இருந்து வடவாறு வழியாக வீராணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு - வீராணம் அணை ஏற்கனவே நிரம்பியுள்ளதால் வெள்ளாறு வழியாக கடலுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
ரூ.490 கோடி மதிப்பீட்டில் ஆதனூர் - குமாரமங்கலம் தடுப்பணை கட்டப்பட்டு பணிகள் முடிந்து மூன்று மாதம் ஆன பின்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இன்னும் நீர்வளத்துறை தாமதம் செய்து கொண்டிருக்கிறது.
அமைச்சருக்காக காத்திருக்கும் அதிகாரிகள்:
கர்நாடகாவிலிருந்து காவேரியில் ஒரு லட்சம் கனஅடி உபநீர் திறக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் மேட்டூர் அணையில் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு, கொள்ளிடம் வழியாக கடலுக்கு அனுப்பப்படுமே தவிர, விவசாய நிலங்களுக்கு அனுப்புவதற்காக நீரவளத்துறை பணிகளை செய்யாமல், அமைச்சருக்காக காத்திருந்து கொண்டிருப்பது சரியா ?
வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவர் வந்தவுடன் மட்டுமே அணைக்கரையில் இருந்து வடக்கு ராஜன் மற்றும் தெற்கு ராஜன் கால்வாய் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அமைச்சர் வருகைக்காக தண்ணீரை திறக்காமல் பாசனத்துக்கு தண்ணீர் விடாமல் கடலுக்கு தண்ணீரை திறந்து விட்டுள்ளது அதிகாரிகள் விவசாயிகளுக்கு செய்துள்ள மாபெரும் துரோகமாகும்.
கோரிக்கை நிறைவேற்றவில்லை:
கடலூர் மாவட்டத்தில் வடக்கு ராஜன் கால்வாய் பகுதி பாசனத்தில் தெளிப்பு மூலமாக நெல் வேளாண்மை செய்யப்படுவதால், விவசாய நிலங்களுக்கு ஈரப்பதம் ஏற்படாத வகையில் கால்நடைகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் திறந்து விட வேண்டுமென வைத்த கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு - சீர்காழி வட்டங்கள் காய்ந்து கிடக்கின்றன. ஆனால் மறுபுறம் பாசன நீர் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.
தண்ணீர் திறக்கும் வரை தொடர் காத்திருப்புப் போராட்டம்:
வேளாண்மை துறை அமைச்சர் இல்லாத பட்சத்தில் அதற்கு அடுத்த மக்கள் பிரதிநிதிகளை, அமைச்சர்களை வைத்து திறந்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீரை கொண்டு சேர்க்க வேண்டிய நீர் உள்ள ஆதாரத்துறை அமைச்சர் வருகைக்காக தண்ணீரை கடலுக்கு அனுப்பி வருவது மயிலாடுதுறை - கடலூர் மாவட்ட விவசாயிகள் கடுமையான வேதனை ஏற்படுத்தியுள்ளது. இதை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால் திருச்சியில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு தண்ணீர் திறக்கும் வரை தொடர் காத்திருப்புப் போராட்டம் தமிழர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடலூர் மயிலாடுதுறை மாவட்ட விவசாயி திரட்டி நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.