கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில், நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுக்களையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
நாமக்கல் மாவட்டச் செயலாளர் மனு தள்ளுபடி
கடந்த செப்டம்பர் 28, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அக்டோபர் 27, 2025 அன்று விசாரித்த நீதிபதிகள், தவெக தரப்பினர் மீது கடும் கேள்விகளை எழுப்பினர்.
தற்போது தவெகவினர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து எதுவும் தெரியாது எனச் சொல்வது சரியா? கட்சியினரைக் கட்டுப்படுத்த முடியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சிபிஐ விசாரணை கோரிக்கை நிராகரிப்பு
இதே விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிச் சமூக ஆர்வலர் உட்பட 7 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுக்களையும் நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், "இது ஒரு துயர சம்பவம். நீதிமன்றத்தை அரசியல் மேடையாக ஆக்க வேண்டாம்" என்று கண்டனம் தெரிவித்தனர்.
விசாரணை முடிவடைந்த பிறகு அதில் திருப்தி இல்லை என்றால் சிபிஐ விசாரணையைக் கோரலாம் எனக் கூறிய நீதிபதிகள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்கள்
மேலும், கரூர் விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் தமிழக அரசுக்குச் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவிதமான அரசியல் பொதுக்கூட்டங்களையும், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் நடத்தக் கூடாது.
பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து உறுதி செய்த பிறகுதான் அனுமதி வழங்கப்பட வேண்டும். குடிநீர், மருத்துவ வசதி, உணவு, கழிப்பிட வசதி போன்ற வசதிகள் உள்ளதா என காவல்துறை ஆய்வு செய்த பிறகே அனுமதி வழங்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
சென்னையில் இது போன்ற வழக்கு விசாரணை முடியும் வரை இந்த உத்தரவுகளைக் காவல்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டச் செயலாளர் மனு தள்ளுபடி
கடந்த செப்டம்பர் 28, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அக்டோபர் 27, 2025 அன்று விசாரித்த நீதிபதிகள், தவெக தரப்பினர் மீது கடும் கேள்விகளை எழுப்பினர்.
தற்போது தவெகவினர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து எதுவும் தெரியாது எனச் சொல்வது சரியா? கட்சியினரைக் கட்டுப்படுத்த முடியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சிபிஐ விசாரணை கோரிக்கை நிராகரிப்பு
இதே விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிச் சமூக ஆர்வலர் உட்பட 7 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுக்களையும் நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், "இது ஒரு துயர சம்பவம். நீதிமன்றத்தை அரசியல் மேடையாக ஆக்க வேண்டாம்" என்று கண்டனம் தெரிவித்தனர்.
விசாரணை முடிவடைந்த பிறகு அதில் திருப்தி இல்லை என்றால் சிபிஐ விசாரணையைக் கோரலாம் எனக் கூறிய நீதிபதிகள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்கள்
மேலும், கரூர் விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் தமிழக அரசுக்குச் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவிதமான அரசியல் பொதுக்கூட்டங்களையும், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் நடத்தக் கூடாது.
பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து உறுதி செய்த பிறகுதான் அனுமதி வழங்கப்பட வேண்டும். குடிநீர், மருத்துவ வசதி, உணவு, கழிப்பிட வசதி போன்ற வசதிகள் உள்ளதா என காவல்துறை ஆய்வு செய்த பிறகே அனுமதி வழங்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
சென்னையில் இது போன்ற வழக்கு விசாரணை முடியும் வரை இந்த உத்தரவுகளைக் காவல்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.