தமிழ்நாடு

ஐ.டி ஊழியரிடம் 'Digital Arrest' என 29 லட்சம் மோசடி... சைபர் க்ரைம் போலீசர் அதிரடி நடவடிக்கை!

ஐ.டி ஊழியரிடம் டிஜிட்டல் கைது ( Digital Arrest ) எனக்கூறி மிரட்டி ரூ. 29.9 லட்சத்தை அபகரித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐ.டி ஊழியரிடம் 'Digital Arrest' என 29 லட்சம் மோசடி... சைபர் க்ரைம் போலீசர் அதிரடி நடவடிக்கை!
ஐ.டி ஊழியரிடம் 'Digital Arrest' என 29 லட்சம் மோசடி... சைபர் க்ரைம் போலீசர் அதிரடி நடவடிக்கை!
சைபர் மோசடியால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் மல்லிகார்ஜுன் என்பவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்ததாகவும், அதில் பேசிய ஒருவர் Courier ஊழியர் போன்று ஆள்மாறட்டம் செய்து புகார்தாரரின் ஆதார் எண் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். பிறகு அந்த அழைப்பு மற்றவொருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதில் மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி போன்று பேசி போலி ஆவணங்கள் காட்டி புகார்தாரின் வங்கி கணக்கிற்கு ரூபாய் 29.9 லட்சம் முறையற்ற பணம் வந்துவிட்டதாக கூறி கைது மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மிரட்டியதால் புகார்தாரர் ரூபாய் 29.9 லட்சத்தை மோசடியாளர்களிடம் இழந்துள்ளார்.

இது குறித்து மல்லிகார்ஜுன் 17.11.2024 அன்று அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளரான மேனகா தலைமையிலான குழு புதுச்சேரியை சேர்ந்த ஷாலினி மற்றும் அவரது கணவர் தியாகு ஆகிய இருவரையும் கடந்த மே. 6 ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், விசாரணையில் இருவரும் புதுச்சேரியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருடன் சேர்ந்து பல வங்கி கணக்குகள் ஓபன் செய்து சைபர் மோசடி மூலமாக பெறப்படும் சட்டவிரோத பணத்தை தங்களது வங்கி கணக்கில் வந்தவுடன், அந்த பணத்தை உடனடியாக வங்கியில் இருந்து எடுத்து அந்த பணத்தை மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டது தெரியவந்தது.

ரமேஷ்குமார் என்பவர் தனது மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து ஜூன்.12 அன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் திருநெல்வேலியில் வைத்து ரமேஷ் குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரொக்கம் ரூ.79,500 மற்றும் குற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட 2 லேப்டாப்கள், 5 மொபைல் போன்கள், Phonepe QR Code ஸ்கேனர்கள், 7 சிம் கார்டுகள் 2-Bank Counterfoils, 2 Bank Challans, 3 Bank Pass Books, 4 Cheque Books, Voter ID Cards, PAN Cards, ATM Cards ஆகியவை கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட ரமேஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். "பொதுமக்களிடம் இது போன்று கொரியர் நிறுவனம் அல்லது காவல் துறை அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் அனுப்பி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது போன்று தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வந்தால் அதை உண்மை என நம்பி யாரும் பணத்தை அனுப்ப வேண்டாம். மேலும் இது போன்ற சைபர் மோசடி குற்றங்கள் பற்றி புகாரளிக்க தாங்கள் உடனடியாக இணையதளம் www.cybercrime.gov.in மூலமாகவும் அல்லது அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அல்லது 1930 என்ற உதவி எண்ணை அழைக்கவும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.