சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். 'பேபி புரோட்டின்' என்ற பெயரில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மருமகன் பாபு மற்றும் சந்தியா மீது புகார் ஒன்றை சென்னை அளித்தார்.
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி
இதேபோல் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார். 25க்கும் மேற்பட்டோர் அரசு வேலைவாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிய விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
தான் முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மூத்த மருமகன் என்று அறிமுகப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு பல அதிகாரிகளை தெரியும் என்று கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக நம்ப வைத்து ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். கடந்த 2023 ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை பல தவணைகளில் ரூபாய் சுமார் 2 கோடி ரூபாயை அரசு வேலைக்காக காசு வாங்கிக்கொண்டு பலரையும் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
முன்னாள் அமைச்சரின் மருமகன்
குறிப்பாக அரசு துறைகளில் துணை தாசில்தார், விஏஓ, எஸ்ஓ, உதவிப்பொறியாளர், உள்ளிட்ட அரசு வேலை வாங்கி தருவதாக வேலைக்கு தகுந்தார் போல் பணத்தை வசூல் செய்து ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளனர். மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மகள் மற்றும் மருமகன் என்பதால் பலரும் பணத்தை கொடுத்து ஏமாந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அரசு வேலைக்கு ஏற்றார் போல் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் முதல் அதிகபட்சம் 16 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து ஏமாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணத்தை வாங்கிக்கொண்டு பணத்தை திரும்ப கேட்கும் பொழுது தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தும் தெரிய வந்தது.இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக பலரிடம் மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சிறையில் அடைப்பு
அந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்துள்ள பாபு மீது அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டாவது முறையாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவரது மனைவி சந்தியாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி
இதேபோல் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார். 25க்கும் மேற்பட்டோர் அரசு வேலைவாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிய விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
தான் முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மூத்த மருமகன் என்று அறிமுகப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு பல அதிகாரிகளை தெரியும் என்று கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக நம்ப வைத்து ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். கடந்த 2023 ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை பல தவணைகளில் ரூபாய் சுமார் 2 கோடி ரூபாயை அரசு வேலைக்காக காசு வாங்கிக்கொண்டு பலரையும் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
முன்னாள் அமைச்சரின் மருமகன்
குறிப்பாக அரசு துறைகளில் துணை தாசில்தார், விஏஓ, எஸ்ஓ, உதவிப்பொறியாளர், உள்ளிட்ட அரசு வேலை வாங்கி தருவதாக வேலைக்கு தகுந்தார் போல் பணத்தை வசூல் செய்து ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளனர். மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மகள் மற்றும் மருமகன் என்பதால் பலரும் பணத்தை கொடுத்து ஏமாந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அரசு வேலைக்கு ஏற்றார் போல் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் முதல் அதிகபட்சம் 16 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து ஏமாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணத்தை வாங்கிக்கொண்டு பணத்தை திரும்ப கேட்கும் பொழுது தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தும் தெரிய வந்தது.இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக பலரிடம் மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சிறையில் அடைப்பு
அந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்துள்ள பாபு மீது அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டாவது முறையாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவரது மனைவி சந்தியாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.