சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் அரசு ஆசிரியர்கள் 32 பேருக்கு பணி நிறைவு பாராட்டு விழா வட்டாரத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஐபெக்டோ அகில இந்திய தேசிய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சிக்கு பிற்கு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பதவி ஏற்று 4 வருடம் முடிவடைந்த நிலையில் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்தது வரவேற்கத்தக்கது. ஆனால், கடந்த ஆட்சி முதல் தற்போது நடைபெருவரும் திமுக ஆட்சி வரை 14 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை நிரப்பவில்லை என்று கூறினார்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அப்போது தமிழகத்தை ஆட்சிசெய்த அதிமுக ஆட்சியை குறை சொன்னார். ஆனால், தற்போது ஸ்டாலின் ஆட்சியில் அரசு ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இனிவரும் காலங்களில் திமுக அரசை நம்பப் போவதில்லை என்றும், ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 14 சங்கத்தினர் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். தமிழகத்தில் 50 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய வாக்குகளை அரசு ஊழியர்கள் வைத்துள்ளதாகவும் திமுக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அந்த தொகுதிகளை இழக்க நேரிடும் எனவும் பேசினார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் 4 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பவில்லை எனவும் குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள 243-வது சட்ட விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்படி இல்லையெனில் கூட்டங்கள் ஆர்பாட்டங்கள் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்தார். தமிழகத்தில் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் என நான்காயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. அதை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் கூறினார்.
தொடர்ந்து நிகழ்ச்சிக்கு பிற்கு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பதவி ஏற்று 4 வருடம் முடிவடைந்த நிலையில் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்தது வரவேற்கத்தக்கது. ஆனால், கடந்த ஆட்சி முதல் தற்போது நடைபெருவரும் திமுக ஆட்சி வரை 14 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை நிரப்பவில்லை என்று கூறினார்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அப்போது தமிழகத்தை ஆட்சிசெய்த அதிமுக ஆட்சியை குறை சொன்னார். ஆனால், தற்போது ஸ்டாலின் ஆட்சியில் அரசு ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இனிவரும் காலங்களில் திமுக அரசை நம்பப் போவதில்லை என்றும், ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 14 சங்கத்தினர் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். தமிழகத்தில் 50 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய வாக்குகளை அரசு ஊழியர்கள் வைத்துள்ளதாகவும் திமுக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அந்த தொகுதிகளை இழக்க நேரிடும் எனவும் பேசினார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் 4 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பவில்லை எனவும் குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள 243-வது சட்ட விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்படி இல்லையெனில் கூட்டங்கள் ஆர்பாட்டங்கள் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்தார். தமிழகத்தில் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் என நான்காயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. அதை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் கூறினார்.