ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ய வைத்து நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் சைபர் கிரைம் மோசடி கும்பல் மோசடி செய்து வருகிறது. சமூக வலைதளத்தில் விளம்பரங்கள் செய்தும், திடீரென வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்தும் விதவிதமான முறையில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றுகின்றனர்.
இருக்கும் இடத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசையில் போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து பலரும் ஏமாறுகின்றனர். அதிலும் ஓய்வூதியதாரர்கள் அதிக அளவு ஓய்வூதிய பலன்கள் வங்கியில் வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை குறி வைத்து மோசடி நடைபெறுகிறது.
தனியார் வங்கி பெயரில் மோசடி
இவர்கள் தாங்கள் சேமித்த பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி ஏமாறுகின்றனர். அந்த வகையில் தற்போது நூதன முறையில் போலி ஆன்லைன் டிரேடிங் மோசடி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. பிரபல ஆன்லைன் டிரேடிங் நிறுவனங்கள் பெயரை பயன்படுத்தி போலியாக இணையதளம் மற்றும் செயலியையை உருவாக்கி மோசடி செய்து வந்த சைபர் கிரைம் கும்பல், தற்போது தனியார் வங்கியின் பெயர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் பிரபல வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் பெயரை பயன்படுத்தி நாடு முழுவதும் மோசடியை தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஐசிஐசிஐ டைரக்ட் மற்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டி ஆகிய நிறுவனங்கள் மூலமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு கூறி பல வங்கி வாடிக்கையாளர்களை சைபர் க்ரைம் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளனர் .
தொழிலதிபரிடம் ரூ.23 கோடி மோசடி
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் இரண்டு மாதத்தில் ரூ.23 கோடி அளவிற்கு மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அந்த தொழிலதிபரிடம் ஐசிஐசிஐ செக்யூரிட்டி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி வினிதா பட்டோடியா என்பவர் அணுகியுள்ளார். அதன் பின் வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் இணைத்து இந்த முதலீடு தொடர்பான ஆலோசனைக்கு அஸ்வின் பரேக் என்பவரை அறிமுகப்படுத்தி வயதான தொழிலதிபரிடம் ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம் மூலம் முதலீடு செய்யுமாறு பல்வேறு தவணைகளில் சுமார் 23 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளனர்.
குறிப்பாக 50 லட்சம் முதலீடு செய்தால் எட்டு சதவீதமும், ஒரு கோடி முதலீடு செய்தால் 15 முதல் 20 சதவீதமும் மூன்று கோடிக்கு மேல் முதலீடு செய்தால் 30 லிருந்து 50 சதவீதம் இடம் பல்வேறு விதமான முதலீடு திட்டங்கள் இருப்பதாக கூறி நம்ப வைத்ததாக தெரியவந்துள்ளது. ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது, என ஏபிகே (APK) ஃபைல் ஒன்றை அனுப்பி செயலியை டவுன்லோடு செய்ய வைத்துள்ளனர். இதனை நம்பி ஐசிஐசிஐ செக்யூரிட்டி என்ற பெயரில் செயலியை டவுன்லோட் செய்து முதற்கட்டமாக ஐந்து ரூபாயில் ஆரம்பித்து அடுத்த கட்டமாக ரூ.10 லட்சம் முதலீடு செய்துள்ளார். அதன் பின்பு நீங்கள் விஐபி கிளப்பில் இணையலாம் எனக் கூறி 4 கோடி ரூபாய் முதலீடு செய்து லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். ஒவ்வொரு முறையும் அதிகப்படியான தொகை உள்ள பங்குகளை காட்டி சுமார் ரூ.23 கோடி வரை முதலீடு செய்ததாக தொழில் அதிபர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக சில லட்சங்களை லாபமாக எடுத்துக் கொள்ள அனுமதித்ததாகவும் அதன் பின்பு இதனை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்த போது ரூ.56 கோடி வரை லாபம் கிடைத்ததாக அந்த செயலியில் காட்டியதாகவும் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். அதன் பின்பு பணத்தை செயலியில் இருந்து எடுக்க முயற்சித்த போது அதற்கு சேவை கட்டணம், வருமான வரி கட்டணம் என பல காரணங்களை கூறி கோடிக்கணக்கில் பணம் கேட்டதாகவும், ஒரு கட்டத்தில் கட்ட தவறினால் உங்கள் ஆன்லைன் டிரேடிங் அக்கவுண்ட் முடக்கப்படும் என பயமுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தான் தன் ஐசிஐசிஐ வங்கி கிளைக்கு சென்று அதிகாரிகளை அணுகும் போது மோசடிக்கு உள்ளானது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியா முழுவதும் வினிதா பட்டோடியா மற்றும் அஸ்வின் பரேக், ராஜுவ் அம்பானி, வினிதா பரேஜ் என்ற பெயர்களில் ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும், குறிப்பாக தொழிலதிபர்கள் அதிகளவு டெபாசிட் செய்து வைத்தவர்களை குறி வைத்து இந்த போலி ஆன்லைன் டிரேடிங் மோசடி நடைபெற்று வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதியவர்கள் - தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி
இதே பெயரில் தென்னிந்தியாவில் மட்டும் தெலங்கானா, பெங்களூர், ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் 50 கோடி ரூபாய்க்கு முதியவர்களையும் தொழிலதிபர்களையும் குறி வைத்து இந்த மோசடியை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது. பல மாநில சைபர் க்ரைம் போலீசார் இவர்களை தேடி வருகின்றனர். குறிப்பாக krtdsr.com, pyuert.com, icicixltops.com, icicidro.com, and icicimpro.com என்ற பல்வேறு பெயரில் ஐசிஐசிஐ வங்கியின் பெயரை பயன்படுத்தி மோசடிகளை அரங்கேற்றுவதாகவும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் icici வங்கியில் இருந்தும் சமூக வலைதளங்கள் மூலமாக இதுபோன்று ஆன்லைன் டிரேடிங் மோசடியை பணத்தை இழக்க வேண்டாம் எனவும் தொடர்ந்து விளம்பரங்கள் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ வங்கி பயன்படுத்தி நடத்தப்படும் இந்த மோசடியில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுமார் ரூ.23 கோடி வரை இழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருக்கும் இடத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசையில் போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து பலரும் ஏமாறுகின்றனர். அதிலும் ஓய்வூதியதாரர்கள் அதிக அளவு ஓய்வூதிய பலன்கள் வங்கியில் வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை குறி வைத்து மோசடி நடைபெறுகிறது.
தனியார் வங்கி பெயரில் மோசடி
இவர்கள் தாங்கள் சேமித்த பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி ஏமாறுகின்றனர். அந்த வகையில் தற்போது நூதன முறையில் போலி ஆன்லைன் டிரேடிங் மோசடி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. பிரபல ஆன்லைன் டிரேடிங் நிறுவனங்கள் பெயரை பயன்படுத்தி போலியாக இணையதளம் மற்றும் செயலியையை உருவாக்கி மோசடி செய்து வந்த சைபர் கிரைம் கும்பல், தற்போது தனியார் வங்கியின் பெயர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் பிரபல வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் பெயரை பயன்படுத்தி நாடு முழுவதும் மோசடியை தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஐசிஐசிஐ டைரக்ட் மற்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டி ஆகிய நிறுவனங்கள் மூலமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு கூறி பல வங்கி வாடிக்கையாளர்களை சைபர் க்ரைம் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளனர் .
தொழிலதிபரிடம் ரூ.23 கோடி மோசடி
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் இரண்டு மாதத்தில் ரூ.23 கோடி அளவிற்கு மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அந்த தொழிலதிபரிடம் ஐசிஐசிஐ செக்யூரிட்டி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி வினிதா பட்டோடியா என்பவர் அணுகியுள்ளார். அதன் பின் வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் இணைத்து இந்த முதலீடு தொடர்பான ஆலோசனைக்கு அஸ்வின் பரேக் என்பவரை அறிமுகப்படுத்தி வயதான தொழிலதிபரிடம் ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம் மூலம் முதலீடு செய்யுமாறு பல்வேறு தவணைகளில் சுமார் 23 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளனர்.
குறிப்பாக 50 லட்சம் முதலீடு செய்தால் எட்டு சதவீதமும், ஒரு கோடி முதலீடு செய்தால் 15 முதல் 20 சதவீதமும் மூன்று கோடிக்கு மேல் முதலீடு செய்தால் 30 லிருந்து 50 சதவீதம் இடம் பல்வேறு விதமான முதலீடு திட்டங்கள் இருப்பதாக கூறி நம்ப வைத்ததாக தெரியவந்துள்ளது. ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது, என ஏபிகே (APK) ஃபைல் ஒன்றை அனுப்பி செயலியை டவுன்லோடு செய்ய வைத்துள்ளனர். இதனை நம்பி ஐசிஐசிஐ செக்யூரிட்டி என்ற பெயரில் செயலியை டவுன்லோட் செய்து முதற்கட்டமாக ஐந்து ரூபாயில் ஆரம்பித்து அடுத்த கட்டமாக ரூ.10 லட்சம் முதலீடு செய்துள்ளார். அதன் பின்பு நீங்கள் விஐபி கிளப்பில் இணையலாம் எனக் கூறி 4 கோடி ரூபாய் முதலீடு செய்து லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். ஒவ்வொரு முறையும் அதிகப்படியான தொகை உள்ள பங்குகளை காட்டி சுமார் ரூ.23 கோடி வரை முதலீடு செய்ததாக தொழில் அதிபர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக சில லட்சங்களை லாபமாக எடுத்துக் கொள்ள அனுமதித்ததாகவும் அதன் பின்பு இதனை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்த போது ரூ.56 கோடி வரை லாபம் கிடைத்ததாக அந்த செயலியில் காட்டியதாகவும் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். அதன் பின்பு பணத்தை செயலியில் இருந்து எடுக்க முயற்சித்த போது அதற்கு சேவை கட்டணம், வருமான வரி கட்டணம் என பல காரணங்களை கூறி கோடிக்கணக்கில் பணம் கேட்டதாகவும், ஒரு கட்டத்தில் கட்ட தவறினால் உங்கள் ஆன்லைன் டிரேடிங் அக்கவுண்ட் முடக்கப்படும் என பயமுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தான் தன் ஐசிஐசிஐ வங்கி கிளைக்கு சென்று அதிகாரிகளை அணுகும் போது மோசடிக்கு உள்ளானது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியா முழுவதும் வினிதா பட்டோடியா மற்றும் அஸ்வின் பரேக், ராஜுவ் அம்பானி, வினிதா பரேஜ் என்ற பெயர்களில் ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும், குறிப்பாக தொழிலதிபர்கள் அதிகளவு டெபாசிட் செய்து வைத்தவர்களை குறி வைத்து இந்த போலி ஆன்லைன் டிரேடிங் மோசடி நடைபெற்று வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதியவர்கள் - தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி
இதே பெயரில் தென்னிந்தியாவில் மட்டும் தெலங்கானா, பெங்களூர், ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் 50 கோடி ரூபாய்க்கு முதியவர்களையும் தொழிலதிபர்களையும் குறி வைத்து இந்த மோசடியை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது. பல மாநில சைபர் க்ரைம் போலீசார் இவர்களை தேடி வருகின்றனர். குறிப்பாக krtdsr.com, pyuert.com, icicixltops.com, icicidro.com, and icicimpro.com என்ற பல்வேறு பெயரில் ஐசிஐசிஐ வங்கியின் பெயரை பயன்படுத்தி மோசடிகளை அரங்கேற்றுவதாகவும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் icici வங்கியில் இருந்தும் சமூக வலைதளங்கள் மூலமாக இதுபோன்று ஆன்லைன் டிரேடிங் மோசடியை பணத்தை இழக்க வேண்டாம் எனவும் தொடர்ந்து விளம்பரங்கள் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ வங்கி பயன்படுத்தி நடத்தப்படும் இந்த மோசடியில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுமார் ரூ.23 கோடி வரை இழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.