குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட போயிங் 787 ஏர் இண்டியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அங்குள்ள விமான நிலையத்தின் நிலைமை சீரடைந்த பின் சென்னை, அகமதாபாத் விமான சேவை மீண்டும் தொடங்கும் என விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குஜராத் அகமாதபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு விமானம் செல்லும் போது விபத்துக்குள்ளானது. இதனால் அகமதாபாத் விமான நிலைய ஒடுபாதை மூடப்பட்டது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத்திற்கு 132 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.
அகமதாபாத் விமான நிலைய ஒடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதால் தரையிறங்க முடியாது என்பதால் சென்னைக்கே திரும்பி வர விமான நிலைய கட்டுபாட்டு அறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து பாதி தூரம் சென்ற விமானம் மீண்டும் சென்னைக்கே மாலை 3.05 மணிக்கு வந்து தரையிறங்கியது.
அதேப்போல் மாலை 5.45 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் இண்டிகோ விமானமும், அகமதாபாத்தில் இருந்து மாலை 6.55 மணிக்கும், இரவு 10.10 மணிக்கும் வர வேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்ய உள்ள பயணிகளுக்கு முழு தொகை திருப்பி வழங்கப்படும். அல்லது வேறு தேதிக்கு மாற்றி கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஜராத் அகமாதபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு விமானம் செல்லும் போது விபத்துக்குள்ளானது. இதனால் அகமதாபாத் விமான நிலைய ஒடுபாதை மூடப்பட்டது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத்திற்கு 132 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.
அகமதாபாத் விமான நிலைய ஒடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதால் தரையிறங்க முடியாது என்பதால் சென்னைக்கே திரும்பி வர விமான நிலைய கட்டுபாட்டு அறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து பாதி தூரம் சென்ற விமானம் மீண்டும் சென்னைக்கே மாலை 3.05 மணிக்கு வந்து தரையிறங்கியது.
அதேப்போல் மாலை 5.45 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் இண்டிகோ விமானமும், அகமதாபாத்தில் இருந்து மாலை 6.55 மணிக்கும், இரவு 10.10 மணிக்கும் வர வேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்ய உள்ள பயணிகளுக்கு முழு தொகை திருப்பி வழங்கப்படும். அல்லது வேறு தேதிக்கு மாற்றி கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.