ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகையும் அதிலிருந்த 8 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை கடலில் அறுத்து வீசி இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து நேற்று 370-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 3000 மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலை கரை திரும்பும் போது மன்னார் வடக்கு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த காந்தி வேல், செல்வம், ஈஸ்வரன், செய்யது இப்ராஹிம், கல்யாணராமன் உள்ளிட்ட 8 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை முதற்கட்ட விசாரணை செய்த பின்னர் மீனவர்களை மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து.
இதனிடையே இன்று நேற்று இரவு கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் மீன் பிடி வலைகளை கடற்படையினர் வெட்டி கடலில் வீசியுள்ளனர்.
இதனால் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதால் பட ஒன்றுக்கு சுமார் ரூ.70 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கரை திரும்பியதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்பொழுது இலங்கை ராமேஸ்வரத்தில் சேர்ந்த எட்டு மீனவர்களையும் வருகின்ற ஜூலை 3 தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து நேற்று 370-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 3000 மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலை கரை திரும்பும் போது மன்னார் வடக்கு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த காந்தி வேல், செல்வம், ஈஸ்வரன், செய்யது இப்ராஹிம், கல்யாணராமன் உள்ளிட்ட 8 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை முதற்கட்ட விசாரணை செய்த பின்னர் மீனவர்களை மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து.
இதனிடையே இன்று நேற்று இரவு கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் மீன் பிடி வலைகளை கடற்படையினர் வெட்டி கடலில் வீசியுள்ளனர்.
இதனால் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதால் பட ஒன்றுக்கு சுமார் ரூ.70 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கரை திரும்பியதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்பொழுது இலங்கை ராமேஸ்வரத்தில் சேர்ந்த எட்டு மீனவர்களையும் வருகின்ற ஜூலை 3 தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.