ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
போட்டிக்கு பின் கைகுலுக்கல் இல்லை
போட்டி முடிந்த பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்தனர். முன்னதாக, டாஸ் போடும்போதும் கைகுலுக்கல் நடைபெறவில்லை. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் ஓய்வறையும் மூடப்பட்டது. இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது.
இரு கேப்டன்களின் கருத்து
இது குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், “நாங்கள் விளையாட மட்டுமே வந்தோம். அவர்களுக்குப் பதில் அளித்தோம். சில விஷயங்கள் விளையாட்டு உணர்வுக்கு அப்பாற்பட்டவை” என்றார்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா பேசுகையில், “நாங்கள் கைகுலுக்க விரும்பினோம். ஆனால், எதிர் அணி வீரர்கள் அதைச் செய்யாததால் ஏமாற்றம் அடைந்தோம். ஆட்டத்தில் ஏமாற்றம் அடைந்தாலும், கைகுலுக்க விரும்பினோம்” என்றார். இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவையும் பாகிஸ்தான் கேப்டன் புறக்கணித்தார்.
இதற்கிடையே, கைகுலுக்காதது தொடர்பாக இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்தது. எனினும், இந்திய அணி கைகுலுக்காமல் இருப்பது குறித்துப் போட்டி நடுவர் ஆண்டி பைக்கிராஃபிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கு பின் கைகுலுக்கல் இல்லை
போட்டி முடிந்த பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்தனர். முன்னதாக, டாஸ் போடும்போதும் கைகுலுக்கல் நடைபெறவில்லை. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் ஓய்வறையும் மூடப்பட்டது. இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது.
இரு கேப்டன்களின் கருத்து
இது குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், “நாங்கள் விளையாட மட்டுமே வந்தோம். அவர்களுக்குப் பதில் அளித்தோம். சில விஷயங்கள் விளையாட்டு உணர்வுக்கு அப்பாற்பட்டவை” என்றார்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா பேசுகையில், “நாங்கள் கைகுலுக்க விரும்பினோம். ஆனால், எதிர் அணி வீரர்கள் அதைச் செய்யாததால் ஏமாற்றம் அடைந்தோம். ஆட்டத்தில் ஏமாற்றம் அடைந்தாலும், கைகுலுக்க விரும்பினோம்” என்றார். இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவையும் பாகிஸ்தான் கேப்டன் புறக்கணித்தார்.
இதற்கிடையே, கைகுலுக்காதது தொடர்பாக இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்தது. எனினும், இந்திய அணி கைகுலுக்காமல் இருப்பது குறித்துப் போட்டி நடுவர் ஆண்டி பைக்கிராஃபிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.