பா.ம.க.வில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இருவரும் தனித்தனியாகக் கட்சியின் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கேட்கும் கருவி இருப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், wi-fi மூலம் அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தவர்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், “உலகத்திலேயே, தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால், இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள்” என்று அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த நிலையில், “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை மீது மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? என்ற இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை போல் மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்?
தந்தையின் மீதான மதிப்பு வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுரை கூறாமல் அமைதி காக்கிறார் எனும் பெருந்தன்மை இப்பொழுது புரியாமல் போகலாம்.
கடந்த காலங்களில் பொறாமையினாலும் வயிற்றெரிச்சலினாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது வன்மத்தை ஊடகங்களில் கக்கி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள் யார் யார் என்பது இம்மக்களுக்கு புரியும்.
சமூக வலைதளத்தை பயன்படுத்தி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த ஓநாய்கள் எல்லாம் இப்போது ஐயாவை புகழ்வது போல் புகழ்ந்து கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் மக்கள் நன்கு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
புறணிப்பேசி வயிறு வளர்க்கும் இத்தகைய சமூக வலைதளப் போராளிகளின் மானம் கெட்ட பிழைப்பு நெடுநாள் நடக்காது என்பதை காலம் விரைவில் உணர்த்தும்! காத்திருங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கேட்கும் கருவி இருப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், wi-fi மூலம் அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தவர்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், “உலகத்திலேயே, தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால், இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள்” என்று அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த நிலையில், “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை மீது மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? என்ற இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை போல் மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்?
தந்தையின் மீதான மதிப்பு வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுரை கூறாமல் அமைதி காக்கிறார் எனும் பெருந்தன்மை இப்பொழுது புரியாமல் போகலாம்.
கடந்த காலங்களில் பொறாமையினாலும் வயிற்றெரிச்சலினாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது வன்மத்தை ஊடகங்களில் கக்கி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள் யார் யார் என்பது இம்மக்களுக்கு புரியும்.
சமூக வலைதளத்தை பயன்படுத்தி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த ஓநாய்கள் எல்லாம் இப்போது ஐயாவை புகழ்வது போல் புகழ்ந்து கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் மக்கள் நன்கு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
புறணிப்பேசி வயிறு வளர்க்கும் இத்தகைய சமூக வலைதளப் போராளிகளின் மானம் கெட்ட பிழைப்பு நெடுநாள் நடக்காது என்பதை காலம் விரைவில் உணர்த்தும்! காத்திருங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.