அரசியல்

ஜனவரி 5 வரை வெயிட் பண்ணுங்க..அமித்ஷா கொடுத்த அப்டேட்.!

தேர்தலுக்கு முன்பாக பணப்பட்டுவாடாவிற்கு பாஜக ரெடியாக இருப்பதாகவும், அதற்கு ஜனவரி 5 ஆம் தேதி வரை வெயிட் செய்ய வேண்டும் என்றும் அப்டேட் கொடுத்துள்ள அமித்ஷா, பாஜகவினருக்கு சில முக்கிய டாஸ்குகளை கொடுத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 5 வரை வெயிட் பண்ணுங்க..அமித்ஷா கொடுத்த அப்டேட்.!
ஜனவரி 5 வரை வெயிட் பண்ணுங்க.. அமித்ஷா கொடுத்த அப்டேட்.!
கடந்த 7ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்திருந்த நிலையில், மறுநாள் 8ம் தேதி மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க. மையக் குழு நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளின் கருத்துகளை தெரிவிக்குமாறு அமித்ஷா கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் என மூத்த தலைவர்கள் பலரும் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருக்க, பொன் வி.பாலகணபதி, 'நம்ம பூத் ஏஜென்டுகளுக்கு இப்போதிருந்தே பணப்பட்டுவாடாவை தொடங்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவார்கள்' என்று கூறினாராம்.

அப்போது, குறுக்கிட்ட அமித்ஷா ”இப்பவே எதற்கு பணம் தரவேண்டும்? அடுத்த ஆண்டு 5 ஜனவரி மாதம் இதைப் பற்றி பேசிக்கொள்ளலாம்” என்று திட்டவட்டமாக கூறிவிட்டராம்.

அடுத்து ஏஜி சம்பத், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. த.வெ.க.வை நம் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்திய அமிட்ஷாவிடம், ”சென்னை அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை இன்னும் பெரிதாக்கி இருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு கொண்டு போயிருந்தால், அதை வைத்து பெரிய அளவில் அரசியல் செய்திருக்கலாம்” என்று வி.பி.துரைசாமி தெரிவித்தாராம்.

இதற்கு பதிலளித்த அமித்ஷா, ”சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கொடுக்கச் சொன்னால், வேறு விஷயங்களைப் பேசுகிறீர்களே.. என கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

”தி.மு.க. மீதான ஊழல் புகார்களை கையில் எடுத்து சி.பி.ஐ, ஈ.டி, ஐ.டி எல்லாவற்றையும் வைத்து ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்” என சில நிர்வாகிகள் பேச, அதற்கு பதிலளித்த அமித்ஷா, ”அனைத்தையும் உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. நீங்கள் சொல்வது போல எல்லாம் செய்ய முடியாது” என மறுத்து இருக்கிறாராம்.

இதைத் தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமித்ஷா, ”புதிய தலைவர் நயினார் நகேந்திரனுக்கு சரியான ஒத்துழைப்பு இல்லை. தனித் தனி கோஷ்டியாக செயல்படுவதை விட்டுவிட்டு, ஒற்றுமையாக செயல்படத் தொடங்குங்கள். உத்தரப்பிரதேசத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பூத் கமிட்டிகள் உள்ளன. இவை அனைத்திலும் பா.ஜ.க. பூத் கமிட்டி அமைத்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் 60 ஆயிரம் பூத் கமிட்டி மட்டுமே உள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் முழுமையாக பூத் கமிட்டி அமைத்துள்ளன. ஆனால், இந்தியாவில் மிகப்பெரிய கட்சி என கூறிக் கொள்ளும் நம்மால் தமிழகத்தில் பூத் கமிட்டி அமைக்க முடியவில்லை. கன்னியாகுமரி, கோவை என விரல் விட்டுச் சொல்லும் அளவிற்கே சில மாவட்டங்களில் பூத் கமிட்டி முழுமையாக உள்ளது.

40 சதவிகிதம் கூட பூத் கமிட்டி அமைக்கவில்லை. நான் தமிழகம் வரும் போதெல்லாம் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என கூறுகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் பூத் கமிட்டி என்ற பெயரில் போலி பட்டியலை கொடுக்கிறீர்கள். 30 நாட்கள் அவகாசம் தருகிறேன். பூத் கமிட்டி பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு அனுப்பி வையுங்கள்” என்று ஸ்டிரிக்ட்டாக கூறிவிட்டாராம்.

எனவே, நிர்வாகிகள் “நாம் என்ன சொன்னாலும் காதிலேயே வாங்க மாட்டேங்குறாரே, யாரிடம் சென்று தான் குறைகளை கூற வேண்டும்” என்ற குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.