10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடித்த திமுக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வென்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஸ்டாலின் களப்பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளார்.
200 தொகுதிகளில் வெற்றி என்பதை இலக்காக வைத்து தேர்தல் பணியைத் தொடங்கியுள்ள ஸ்டாலின், மாவட்டந்தோறும் சென்று அங்கு நடைபெறும் பூக் கமிட்டி மீட்டிங், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று கட்சித் தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.
மறுபக்கம் திமுக கூட்டணியை உடைக்க அதிமுகவும் தவெகவும் தனித்தனியே காய்நகர்த்திப் பார்த்த நிலையில், அவற்றையெல்லாம் முறியடித்த தி.மு.க, கூட்டணியில் உள்ள கட்சிகளை கலையவிடாமல் பாதுகாத்து வருகிறது. இருந்த போதிலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக சீட் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் எனும் கோஷத்தை காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் முன்வைக்கத் தொடங்கிவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை இப்படி சென்றுக்கொண்டிருக்க, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றி தி.மு.க.வால் தனித்து நின்று ஜெயிக்க முடியாது என்று இவ்வளவு நாளும் பகையாளிகள் மட்டுமே சொல்லிவந்த நிலையில் பங்காளி ஒருவரும் அதே கருத்தை அழுத்திச் சொல்ல ஆடிப்போயிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் இப்படி பேச திமுக தலைமை வெலவெலத்துப்போயிருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நேற்று முன்தினம் திருச்சியில் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தபோது சந்தித்து பேசினார்.அப்போது, தான் எழுதிய "பேசு பேசு நல்லா பேசு" என்ற புத்தகத்தை திருமாவளவனிடம் வைகைச்செல்வன் வழங்கினார். அதன் பிறகு, இருவரும் சுமார் அரை மணி நேரம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது
இந்த சந்திப்பு குறித்து, காஞ்சீபுரத்தில் வைகைச்செல்வனிடம் கேள்வி வைக்கப்பட்டது. அதாவது, நிருபர்கள் அவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுடனான சந்திப்பு குறித்து கேட்டதற்கு,"அ.தி.மு.க. கூட்டணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும். பலர் வர உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது. போகப்போக என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறினார். வைகைச்செல்வனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கம்யூனிஸ்டுகளும், விசிகவும் கேட்கும் சீட் ஷாரிங்கை திமுக கொடுக்குமா அல்லது கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..
200 தொகுதிகளில் வெற்றி என்பதை இலக்காக வைத்து தேர்தல் பணியைத் தொடங்கியுள்ள ஸ்டாலின், மாவட்டந்தோறும் சென்று அங்கு நடைபெறும் பூக் கமிட்டி மீட்டிங், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று கட்சித் தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.
மறுபக்கம் திமுக கூட்டணியை உடைக்க அதிமுகவும் தவெகவும் தனித்தனியே காய்நகர்த்திப் பார்த்த நிலையில், அவற்றையெல்லாம் முறியடித்த தி.மு.க, கூட்டணியில் உள்ள கட்சிகளை கலையவிடாமல் பாதுகாத்து வருகிறது. இருந்த போதிலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக சீட் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் எனும் கோஷத்தை காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் முன்வைக்கத் தொடங்கிவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை இப்படி சென்றுக்கொண்டிருக்க, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றி தி.மு.க.வால் தனித்து நின்று ஜெயிக்க முடியாது என்று இவ்வளவு நாளும் பகையாளிகள் மட்டுமே சொல்லிவந்த நிலையில் பங்காளி ஒருவரும் அதே கருத்தை அழுத்திச் சொல்ல ஆடிப்போயிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் இப்படி பேச திமுக தலைமை வெலவெலத்துப்போயிருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நேற்று முன்தினம் திருச்சியில் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தபோது சந்தித்து பேசினார்.அப்போது, தான் எழுதிய "பேசு பேசு நல்லா பேசு" என்ற புத்தகத்தை திருமாவளவனிடம் வைகைச்செல்வன் வழங்கினார். அதன் பிறகு, இருவரும் சுமார் அரை மணி நேரம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது
இந்த சந்திப்பு குறித்து, காஞ்சீபுரத்தில் வைகைச்செல்வனிடம் கேள்வி வைக்கப்பட்டது. அதாவது, நிருபர்கள் அவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுடனான சந்திப்பு குறித்து கேட்டதற்கு,"அ.தி.மு.க. கூட்டணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும். பலர் வர உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது. போகப்போக என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறினார். வைகைச்செல்வனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கம்யூனிஸ்டுகளும், விசிகவும் கேட்கும் சீட் ஷாரிங்கை திமுக கொடுக்குமா அல்லது கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..