அரசியல்

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் அதற்கான வேலைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (ஜூன் 6) சென்னையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்பதுரை, தனபால் ஆகியோர் இன்று பிற்பகல் 12.45 மணிக்கு சென்னையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னணி கட்சி தலைவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில், திமுக சார்பில், வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கமல்ஹாசன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக சார்பில், அதேபோல், திமுக வேட்பாளர்கள் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கமல்ஹாசன் ஆகிய 4 பேரும் நாளை வேட்புனு தாக்கல் செய்வார்கள் என தகவல் வெளியானது.

அதேபோல், திமுக வேட்பாளர்களும் கமல் ஹாசனும் இன்று பிற்பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவா்களும் பங்கேற்பாா்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாக மாறி வருகிறது. இரு பெரிய கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.