மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் முக்கிய தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து இந்த உரையை தொடங்குகிறேன்.இந்த மண்ணின் சொக்கநாதருக்கும், கள்ளழகர், முருகனை வணங்குகிறேன். மதுரை 3 ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த மாநகரம். இந்த மண்ணின் மைந்தன் பசும் பொன் முத்துராமலிங்க தேவரையும் வணங்குகிறேன். தமிழ் நாட்டிற்கு வந்து தமிழ் மக்களை சந்தித்து தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். முருகனுக்கான மாநாடு ஜூன் 22 நடைபெறுகிறது. அதனை வெற்றி பெற நீங்கள் உதவ வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த கூட்டம் மாற்றத்தை உண்டாக்கும், திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும். 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். நான் டெல்லியில் இருந்தாலும் தமிழ்நாடு மீது தான் என்ன காதுகள் இருக்கும்" என்றார்.
மேலும் அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார், 'அமித்ஷா அவர்களால் திமுகவை தோற்கடிக்க முடியாது'. அது உண்மை தான். ஆனால், மக்கள் உங்களை தோற்கடிக்க காத்து கொண்டு இருக்கிறார்கள். மக்களின் நாடி துடிப்பாக சொல்கிறேன் திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள்" என்று ஆவசேமாக கூறினார்.
"அப்பாவி மக்கள் கொள்ளப்பட்ட போது வடக்கில் ஆதரவு கிடைத்தது. ஆனால் ஆப்பேரஷன் சிந்தூருக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து எதிர் நாட்டிற்குள் சென்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம். இது தான் மோடி அரசு. இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு முந்தைய அரசு பதிலடி கொடுத்தது இல்லை. ஆனால், பாஜக அரசு ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல், சார்ஜிகள் ஸ்ட்ரக் ஆகியவற்றை நடத்தி இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தி உள்ளோம்" என்று அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து இந்த உரையை தொடங்குகிறேன்.இந்த மண்ணின் சொக்கநாதருக்கும், கள்ளழகர், முருகனை வணங்குகிறேன். மதுரை 3 ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த மாநகரம். இந்த மண்ணின் மைந்தன் பசும் பொன் முத்துராமலிங்க தேவரையும் வணங்குகிறேன். தமிழ் நாட்டிற்கு வந்து தமிழ் மக்களை சந்தித்து தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். முருகனுக்கான மாநாடு ஜூன் 22 நடைபெறுகிறது. அதனை வெற்றி பெற நீங்கள் உதவ வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த கூட்டம் மாற்றத்தை உண்டாக்கும், திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும். 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். நான் டெல்லியில் இருந்தாலும் தமிழ்நாடு மீது தான் என்ன காதுகள் இருக்கும்" என்றார்.
மேலும் அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார், 'அமித்ஷா அவர்களால் திமுகவை தோற்கடிக்க முடியாது'. அது உண்மை தான். ஆனால், மக்கள் உங்களை தோற்கடிக்க காத்து கொண்டு இருக்கிறார்கள். மக்களின் நாடி துடிப்பாக சொல்கிறேன் திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள்" என்று ஆவசேமாக கூறினார்.
"அப்பாவி மக்கள் கொள்ளப்பட்ட போது வடக்கில் ஆதரவு கிடைத்தது. ஆனால் ஆப்பேரஷன் சிந்தூருக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து எதிர் நாட்டிற்குள் சென்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம். இது தான் மோடி அரசு. இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு முந்தைய அரசு பதிலடி கொடுத்தது இல்லை. ஆனால், பாஜக அரசு ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல், சார்ஜிகள் ஸ்ட்ரக் ஆகியவற்றை நடத்தி இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தி உள்ளோம்" என்று அவர் கூறினார்.