பா.ம.க.வில் அன்புமணி ராமதாஸின் எதிர்ப்பினையும் மீறி, பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தனை நியமித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அப்போது அப்பா-மகன் இடையே பனிப்போர் சூழ்ந்துள்ளது என வெளிப்படையாக தெரிய வந்தது.
முகுந்தனால் ஆரம்பித்த பஞ்சாயத்து, அன்புமணியின் தலைவர் பதவியைப் பறிக்கும் அளவிற்குச் சென்றது. கட்சி யார் கண்ட்ரோலில் உள்ளது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள சூழ்நிலையில், பாமக சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஒன்றாக பங்கேற்ற நிலையில், யப்பாடா..பிரச்சினை ஓய்ந்தது போல என பெருமூச்சு விட்ட நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார் ராமதாஸ்.
மைக் ராமதாஸ் பக்கம் வந்ததும் மறைமுகமாக அன்புமணியை சாடி தன் மனதிலிருந்த கருத்துகளை பறக்கவிட்டார். இந்த மாநாட்டிலும் அப்பா – மகன் இடையேயான பிரச்னை மேடையில் வெளிப்பட்டதால் பாமகவினர் கடும் அப்செட்டாகினர். இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராமதாஸ், கண்ணீர் மல்க அன்புமணியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அரசியல் வட்டாரத்தில் இது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில்,பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
”பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Read more: அன்புமணியின் எமோஷனல் பிளாக்மெயில்.. கண்ணீர் சிந்திய ராமதாஸ்
முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, “கடந்த மே 16 ஆம் தேதி கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்த போதே நான் செத்துவிட்டேன்” என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்தது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகுந்தனால் ஆரம்பித்த பஞ்சாயத்து, அன்புமணியின் தலைவர் பதவியைப் பறிக்கும் அளவிற்குச் சென்றது. கட்சி யார் கண்ட்ரோலில் உள்ளது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள சூழ்நிலையில், பாமக சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஒன்றாக பங்கேற்ற நிலையில், யப்பாடா..பிரச்சினை ஓய்ந்தது போல என பெருமூச்சு விட்ட நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார் ராமதாஸ்.
மைக் ராமதாஸ் பக்கம் வந்ததும் மறைமுகமாக அன்புமணியை சாடி தன் மனதிலிருந்த கருத்துகளை பறக்கவிட்டார். இந்த மாநாட்டிலும் அப்பா – மகன் இடையேயான பிரச்னை மேடையில் வெளிப்பட்டதால் பாமகவினர் கடும் அப்செட்டாகினர். இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராமதாஸ், கண்ணீர் மல்க அன்புமணியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அரசியல் வட்டாரத்தில் இது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில்,பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
”பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Read more: அன்புமணியின் எமோஷனல் பிளாக்மெயில்.. கண்ணீர் சிந்திய ராமதாஸ்
முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, “கடந்த மே 16 ஆம் தேதி கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்த போதே நான் செத்துவிட்டேன்” என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்தது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.