2024ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பா.ம.க.வின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் தொடங்கிய மோதல் ஆறு மாதங்களாக தொடர்கிறது. இருவருக்குமான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தோடு ஆடிட்டர் ஒருவரும் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் அடுத்தடுத்து தைலாபுரம் தோட்டத்துக்கு விசிட் அடித்தது அரசியல் களத்தில் பேசுபொருளானது.
இந்நிலையில், சென்னை சென்று திரும்பிய ராமதாஸ், மீண்டும் பா.ம.க., வன்னியர் சங்கம், கிளை அமைப்புகள் என அனைத்திலும் நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தொடங்கிவிட்டார். ஜூன் 10ம் தேதி வரை 49 மா.செக்கள், 27 மாவட்டத் தலைவர்களை நீக்கி புதியவர்களை நியமித்தவர், திலகபாமாவை தொடர்ந்து, வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவையின் மாநிலத் தலைவராக இருந்த பாலுவையும் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.
அதேபோல, பா.ஜ.க.விலிருந்து பாமகவிற்கு வந்த ரவிராஜ், மின்னல் ஏ.கே.மூர்த்தி ஆகியோருக்கும் முக்கிய பொறுப்பை வழங்கியிருக்கிறார். இப்படியான சூழலில்தான், தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி முதல் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தப்போவதாக ராமதாஸுக்கு போட்டியாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் அன்புமணி. இந்த விவகாரம் குறித்து பா.ம.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "கடந்த ஜூன் 5ம் தேதி தோட்டத்துக்கு வந்த அன்புமணி... தாய், சகோதரி, மகள் முன்னிலையில் அய்யாவிடம் சமரசம் பேசினார். அப்போது, 'அப்பா..நீங்க கூட்டணி, சீட் பங்கீடு, ஸ்வீட் பாக்ஸ் பற்றிகூட பேசிக்கோங்க. ஏன், யாருக்கு சீட் தரணும் என்பதைக்கூட முடிவு பண்ணிக்கோங்க. ஆனா, தலைவராக என்னை அறிவியுங்கள். அதேபோல, நிர்வாகிகள் நீக்கத்தை நிறுத்தி, பழையவர்களே தொடர்வார்கள் என சொல்லுங்கள்' என கேட்டார்.
அதற்கு அய்யா, 'நான் இருக்கப் போறதோ கொஞ்ச நாளுதான்... மாநில தலைவரா இருக்கணும்னு ஆசையா இருக்கு...' என அன்புமணியின் கோரிக்கைக்கு அணை போட்டிருக்கிறார். இதனால் அப்செட்டான அன்புமணி, தன் தாயிடம் 'என்னம்மா இவரு... இந்த வயசுலயும் இப்படி பண்றாரு. நானும், செளமியாவும் அவர் கால்களைப் பிடிச்சு அழுதோம், உன்னை வேற அடிக்கப் பார்த்தேன்னு பேட்டி கொடுக்கிறாரு. நான் உன்னைய அடிக்கவா பார்த்தேன்? என புலம்பியிருக்கிறார்.
அதற்கு அவர், 'அவரு யார் பேச்சுப்படி ஆடுறாருனு எல்லாம் தெரியும். நான் பாத்துக்குறேன் நீ போ... என ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார். 2024 தேர்தல் சமயத்தில் எடப்பாடியுடன் நேரடியாக கூட்டணி பேசிவந்த அன்புமணி, 'பாஜக நாம எல்லாம் ஒண்ணா நின்னா 15 சீட் வரைக்கும் அடிக்கலாம். கேபினட்டில் இடம்பிடிக்கலாம்' என டீல் பேசியிருக்கிறார். ஆனால், பா.ஜ.கவுடன் வேண்டாம் என மறுத்த எடப்பாடி, வடக்கு மண்டல மாஜியை வைத்து ராமதாஸிடம் பேசி கூட்டணியை ஓ.கே பண்ணிவிட்டார்.
அதற்கான ஸ்வீட் பாக்ஸ், அய்யாவுக்கு நெருக்கமான அம்மையார் வீட்டுக்குப் போயிருக்கிறது. இதில் டென்ஷனான அன்புமணி, அந்தக் கூட்டணி கணக்கையே உடைத்துவிட்டார். அங்கிருந்து ஆரம்பமானதுதான் இந்த பிரச்னை.
இதையடுத்து, அய்யா சென்னை சென்றபோது, முக்கியமான சொத்துகள் எது, யார் யாருக்கு என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அ.தி.மு.க பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. ஆனால், கட்சியின் பிடி தன் கையில் இருக்கவேண்டும் என்பதில் மட்டும் அய்யா உறுதியாக இருக்கிறார். கட்சியின் விதிகளின்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட வேண்டும். அப்படி 2022ல் நடந்த பொதுக்குழுவில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் - முடிந்துவிட்டது.
அவர் தலைவர் என சொல்லிக்கொண்டாலும் இப்போது அது காலாவதி கணக்குதான். எனவே, விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி, அன்புமணியை செயல் தலைவராக அறிவித்த தன் முடிவை உறுதிப்படுத்த அய்யா முடிவு செய்திருக்கிறார். அதன் ஒருபடியாகத்தான், அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்து அன்புமணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்.
அதிகாரபூர்வ கூட்டத்தைக் கூட்டவும், நிர்வாகி, பொறுப்பாளர்களை நீக்கவும், சேர்க்கவும் கட்சி விதிப்படி அய்யாவுக்கே அதிகாரம் இருக்கிறது. அன்புமணியின் ஆதவாளர் பாலு நீக்கப்பட்டபோது அன்புமணியால் பேச முடியாததற்குக் காரணம் அது பா.ம.க.வின் துணை அமைப்பு. 34 துணை அமைப்புகளிலும் அய்யாவுக்குத்தான் அதிகாரம். அன்புமணியும் தலைவர் என்று போட்டிக்கு கூட்டத்தை கூட்டலாம், தனக்கான ஆதரவை காட்டலாம். தீர்மானமும் நிறைவேற்றலாம்.
ஆனால், நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தேர்தல் ஆணையத்திலோ, நீதிமன்றத்திலோ எங்குமே செல்லுபடி ஆகாது. எனவே, அய்யாவால் நியமிக்கப்படுபவர்களே பொதுக்குழுவின்போது தீர்மானத்தில் கையெழுத்துப் போடுவார்கள். அன்புமணி தரப்பு அப்போது எதிர்ப்பை மட்டுமே காட்ட முடியும். அதனால், இருவரும் இணைவதுதான் கட்சிக்கு நல்லது. இந்த செய்தி வெளியாவதற்குள் முக்கிய திருப்பம்கூட நிகழலாம்" என்றனர் விரிவாக.
குமுதம் செய்திகளுக்காக செய்தியாளர் அ.கண்ணதாசன்
இந்நிலையில், சென்னை சென்று திரும்பிய ராமதாஸ், மீண்டும் பா.ம.க., வன்னியர் சங்கம், கிளை அமைப்புகள் என அனைத்திலும் நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தொடங்கிவிட்டார். ஜூன் 10ம் தேதி வரை 49 மா.செக்கள், 27 மாவட்டத் தலைவர்களை நீக்கி புதியவர்களை நியமித்தவர், திலகபாமாவை தொடர்ந்து, வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவையின் மாநிலத் தலைவராக இருந்த பாலுவையும் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.
அதேபோல, பா.ஜ.க.விலிருந்து பாமகவிற்கு வந்த ரவிராஜ், மின்னல் ஏ.கே.மூர்த்தி ஆகியோருக்கும் முக்கிய பொறுப்பை வழங்கியிருக்கிறார். இப்படியான சூழலில்தான், தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி முதல் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்தப்போவதாக ராமதாஸுக்கு போட்டியாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் அன்புமணி. இந்த விவகாரம் குறித்து பா.ம.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "கடந்த ஜூன் 5ம் தேதி தோட்டத்துக்கு வந்த அன்புமணி... தாய், சகோதரி, மகள் முன்னிலையில் அய்யாவிடம் சமரசம் பேசினார். அப்போது, 'அப்பா..நீங்க கூட்டணி, சீட் பங்கீடு, ஸ்வீட் பாக்ஸ் பற்றிகூட பேசிக்கோங்க. ஏன், யாருக்கு சீட் தரணும் என்பதைக்கூட முடிவு பண்ணிக்கோங்க. ஆனா, தலைவராக என்னை அறிவியுங்கள். அதேபோல, நிர்வாகிகள் நீக்கத்தை நிறுத்தி, பழையவர்களே தொடர்வார்கள் என சொல்லுங்கள்' என கேட்டார்.
அதற்கு அய்யா, 'நான் இருக்கப் போறதோ கொஞ்ச நாளுதான்... மாநில தலைவரா இருக்கணும்னு ஆசையா இருக்கு...' என அன்புமணியின் கோரிக்கைக்கு அணை போட்டிருக்கிறார். இதனால் அப்செட்டான அன்புமணி, தன் தாயிடம் 'என்னம்மா இவரு... இந்த வயசுலயும் இப்படி பண்றாரு. நானும், செளமியாவும் அவர் கால்களைப் பிடிச்சு அழுதோம், உன்னை வேற அடிக்கப் பார்த்தேன்னு பேட்டி கொடுக்கிறாரு. நான் உன்னைய அடிக்கவா பார்த்தேன்? என புலம்பியிருக்கிறார்.
அதற்கு அவர், 'அவரு யார் பேச்சுப்படி ஆடுறாருனு எல்லாம் தெரியும். நான் பாத்துக்குறேன் நீ போ... என ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார். 2024 தேர்தல் சமயத்தில் எடப்பாடியுடன் நேரடியாக கூட்டணி பேசிவந்த அன்புமணி, 'பாஜக நாம எல்லாம் ஒண்ணா நின்னா 15 சீட் வரைக்கும் அடிக்கலாம். கேபினட்டில் இடம்பிடிக்கலாம்' என டீல் பேசியிருக்கிறார். ஆனால், பா.ஜ.கவுடன் வேண்டாம் என மறுத்த எடப்பாடி, வடக்கு மண்டல மாஜியை வைத்து ராமதாஸிடம் பேசி கூட்டணியை ஓ.கே பண்ணிவிட்டார்.
அதற்கான ஸ்வீட் பாக்ஸ், அய்யாவுக்கு நெருக்கமான அம்மையார் வீட்டுக்குப் போயிருக்கிறது. இதில் டென்ஷனான அன்புமணி, அந்தக் கூட்டணி கணக்கையே உடைத்துவிட்டார். அங்கிருந்து ஆரம்பமானதுதான் இந்த பிரச்னை.
இதையடுத்து, அய்யா சென்னை சென்றபோது, முக்கியமான சொத்துகள் எது, யார் யாருக்கு என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அ.தி.மு.க பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. ஆனால், கட்சியின் பிடி தன் கையில் இருக்கவேண்டும் என்பதில் மட்டும் அய்யா உறுதியாக இருக்கிறார். கட்சியின் விதிகளின்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட வேண்டும். அப்படி 2022ல் நடந்த பொதுக்குழுவில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் - முடிந்துவிட்டது.
அவர் தலைவர் என சொல்லிக்கொண்டாலும் இப்போது அது காலாவதி கணக்குதான். எனவே, விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி, அன்புமணியை செயல் தலைவராக அறிவித்த தன் முடிவை உறுதிப்படுத்த அய்யா முடிவு செய்திருக்கிறார். அதன் ஒருபடியாகத்தான், அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்து அன்புமணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்.
அதிகாரபூர்வ கூட்டத்தைக் கூட்டவும், நிர்வாகி, பொறுப்பாளர்களை நீக்கவும், சேர்க்கவும் கட்சி விதிப்படி அய்யாவுக்கே அதிகாரம் இருக்கிறது. அன்புமணியின் ஆதவாளர் பாலு நீக்கப்பட்டபோது அன்புமணியால் பேச முடியாததற்குக் காரணம் அது பா.ம.க.வின் துணை அமைப்பு. 34 துணை அமைப்புகளிலும் அய்யாவுக்குத்தான் அதிகாரம். அன்புமணியும் தலைவர் என்று போட்டிக்கு கூட்டத்தை கூட்டலாம், தனக்கான ஆதரவை காட்டலாம். தீர்மானமும் நிறைவேற்றலாம்.
ஆனால், நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தேர்தல் ஆணையத்திலோ, நீதிமன்றத்திலோ எங்குமே செல்லுபடி ஆகாது. எனவே, அய்யாவால் நியமிக்கப்படுபவர்களே பொதுக்குழுவின்போது தீர்மானத்தில் கையெழுத்துப் போடுவார்கள். அன்புமணி தரப்பு அப்போது எதிர்ப்பை மட்டுமே காட்ட முடியும். அதனால், இருவரும் இணைவதுதான் கட்சிக்கு நல்லது. இந்த செய்தி வெளியாவதற்குள் முக்கிய திருப்பம்கூட நிகழலாம்" என்றனர் விரிவாக.
குமுதம் செய்திகளுக்காக செய்தியாளர் அ.கண்ணதாசன்