2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 7 ஆம் தேதி தொடங்குகிறார். அன்றைய தினம் கவுண்டம்பாளையம் தொகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார். அதை தொடர்ந்து வரும் 8 ஆம் தேதி, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை ஒட்டி கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுமக்கள் மத்தியில் அவர் பிரச்சாரம் செய்யும் வகையில் பிரச்சார வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன்பு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தேர்தல் பிரச்சாரத்தை 2 நாட்கள் நடத்த உள்ளார். அதில் லட்சக் கணக்கான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். மேலும், கூட்டணி கட்சியினரும் கலந்து கொள்வார்கள்.
கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பார்கள். ஏனென்றால் கோவை மாவட்டத்திற்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஏராளமான திட்டங்களை செய்து உள்ளார். அவரது 5 ஆண்டு கால ஆட்சியில் 50 வருடங்களில் நிறைவேற்றக் கூடிய அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி.
கடந்த 2010 ஆம் ஆண்டு நான் மாவட்ட செயலாளராக இருந்த போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த சூழலில் 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 200 தொகுதிகள் வரை வெற்றி பெற்றது. அதேபோன்று கோவை மாவட்டத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிச்சாமியும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார்” என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை ஒட்டி கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுமக்கள் மத்தியில் அவர் பிரச்சாரம் செய்யும் வகையில் பிரச்சார வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன்பு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தேர்தல் பிரச்சாரத்தை 2 நாட்கள் நடத்த உள்ளார். அதில் லட்சக் கணக்கான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். மேலும், கூட்டணி கட்சியினரும் கலந்து கொள்வார்கள்.
கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பார்கள். ஏனென்றால் கோவை மாவட்டத்திற்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஏராளமான திட்டங்களை செய்து உள்ளார். அவரது 5 ஆண்டு கால ஆட்சியில் 50 வருடங்களில் நிறைவேற்றக் கூடிய அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி.
கடந்த 2010 ஆம் ஆண்டு நான் மாவட்ட செயலாளராக இருந்த போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த சூழலில் 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 200 தொகுதிகள் வரை வெற்றி பெற்றது. அதேபோன்று கோவை மாவட்டத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிச்சாமியும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார்” என்று அவர் கூறினார்.